ஆந்திராவில் 2 ரயில்கள் மோதி பயங்கர விபத்து.. தடம்புரண்ட பெட்டிகள்-12 பேர் பலி.. ஏராளமானவர்கள் காயம்
அமராவதி: ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் இன்று இரவு 2 பயணிகள் ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 3 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 12 பயணிகள் பலியான நிலையில் ஏராளாமனவர்கள் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் அங்கு தீவிரமாக நடந்து வருகின்றன.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசாவில் உள்ள ராயகடாவுக்கு இன்று பயணிகள் ரயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் விஜயநகரம் மாவட்டம் கந்தகப்பள்ளி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த தண்டவாளத்தில் விசாகப்பட்டினம்- பலாசா ரயில் வந்து கொண்டிருந்தது.

திடீரென்று 2 ரயில்களும் மோதிக்கொண்டன. இதில் ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. மொத்தம் 3 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அந்த பெட்டிகளில் இருந்த பயணிகள் காயமடைந்து அலறி துடித்தனர்.

இதையடுத்து தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்டு பணியை தொடங்கினர். ஆனால் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு மின்சார கம்பங்கள் சேதமடைந்த நிலையில் மின்சாரம் தடைப்பட்டது. இதனால் இருள் சூழ்ந்துள்ளது. மின்சாரம் இல்லாததால் அங்கு மீட்பு பணி தாமதமாகி உள்ளது.

இருப்பினும் ரயில்வே போலீசார், தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியை தொடங்கினர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த விபத்தில் முதலில் 3 பேர் பலியானதாக கூறப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது பலி எண்ணிக்கை என்பது 12 ஆக அதிகரித்துள்ளது. மற்றவர்களுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே ரயில் விபத்தை தொடர்ந்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீட்பு பணியை வேகமாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவரது அலுவலக ட்விட்டர் பக்கத்தில், ‛‛ரயில் விபத்து எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விரைவாக நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை வழங்கப்படும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். விசாகப்பட்டினம் மற்றும் அனகாபல்லி மாவட்டங்களில் இருந்து ஆம்புலன்ஸ்கள் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீட்பு பணிகள் குறித்த விபரங்களை அவ்வப்போது தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தி உள்ளேன்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications