சபரிமலையில் நாளை புதுவருடத்தை வரவேற்கும் “விஷு கனி காணல்” பூஜை
திருவனந்தபுரம்: கேரளாவில் அமைந்துள்ளசபரிமலை சுவாமி ஐய்யப்பன் கோவிலில் சித்திரை மாத பிறப்பையொட்டி கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி ஐய்யப்பனுக்கு விஷேச பூஜைகள் நடைபெற்று வருகிறது.
சித்திரை மாத பிறப்பான நாளை சபரி மலையில் சித்திரை விஷு கனிகாணுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையட்டி இன்று இரவு 10.50 மணிக்கு அத்தாள பூஜை முடிவடைந்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கும்.
சுவாமி ஐய்யப்பன் விக்ரகம் முன்பு கனி வகைகள், காய்கறிகள், புத்தாடைகள், தங்கம், வெள்ளி மற்றும் ரூபாய் நோட்டுக்கட்டுகள் படைக்கப்படும்.

சில்லறை நாணய படையல்:
மேலும் ஒரு பெரிய வெள்ளி பாத்திரத்தில் சில்லரை நாணயங்கள் படைக்கப்பட்டு இருக்கும். நாளை அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும்.

விஷூ கனிகாணல்:
அதை தொடர்ந்து சுவாமி ஐய்யப்பனுக்கு விஷேச பூஜைகள் நடத்தப்பட்டு சித்திரை விஷு கனிகாணுதல் நடைபெறும். அப்போது பக்தர்களுக்கு சில்லரை காசுகளை கைநீட்டமாக தந்திரி, மேல்சாந்தி மற்றும் கோவில் ஊழியர்கள் வழங்குவார்கள்.

செல்வம் பெருகும்:
இந்த காசுகளை பக்தர்கள் தங்கள் பூஜை அறையில் வைத்து வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். சித்திரை விஷுவையட்டி சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள்:
அவர்கள் இன்றே ஆங்காங்கே கூடாரங்கள் அமைத்து தங்க தொடங்கி விட்டனர். நாளை பக்தர்கள் கூட்டம் இதைவிட அதிகமாக இருக்கும் என்பதால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன்












Click it and Unblock the Notifications