ஒருவழியாக சரி செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திர கோளாறு! ஜோரம் தங்கா வாக்களித்தார்! சலசலப்பு ஓய்ந்தது
ஐசால்: மிசோரம் மாநிலத்தின் 40 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், முதலமைச்சர் ஜோரம் தங்கா வாக்களிக்க இருந்த வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் அவர் வாக்களிக்காமல் வாக்குச்சாவடியை விட்டு வெளியேறினார். சிறிது நேரம் கழித்து இயந்திரம் சரி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் வாக்களித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மிசோரமில் மொத்தம் 40 தொகுதிகள் இருக்கின்றன. இங்கு ஒரே கட்டமாக அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் டிசம்பர் மாதம் 3ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த மாநிலத்தை பொறுத்த அளவில் மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ், ஜோரம் மக்கள் இயக்கம் ஆகியவை முக்கிய கட்சிகளாக உள்ளன. பாஜக பெயரளவில் இருந்தாலும், ஆட்சியில் இருக்கும் மிசோ தேசிய முன்னணி தேசிய அளவில், தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்திருக்கிறது. எனவே பாஜகவும் முக்கிய கட்சியாக பார்க்கப்படுகிறது.

அதேபோல கடந்த 1987ம் ஆண்டு மிசோரம் யூனியன் பிரதேசத்திலிருந்து, மாநிலமாக பரிணமித்ததிலிருந்து அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் மிசோ தேசிய முன்னணி அல்லது காங்கிரஸ்தான் மாறி மாறி ஆட்சியில் இருந்து வந்திருக்கிறது. தற்போது மிசோ தேசிய முன்னணி ஆட்சியிலிருக்கிறது. காங்கிரஸ் எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று முயன்று வருகிறது.
ஆளும் மிசோ தேசிய முன்னணி (MNF) மற்றும் எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) மற்றும் காங்கிரஸ் ஆகியவை 40 தொகுதிகளிலும், பாஜக 23 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி முதன் முறையாக 4 தொகுதிகளிலும் வேட்பாளர்களை இறக்கியுள்ளன. இது தவிர 27 தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். மிசோ தேசிய முன்னணி தலைவரும் முதலமைச்சருமான ஜோரம்தங்கா, ஐஸ்வால் கிழக்கில் போட்டியிடுகிறார். தனது கட்சி 25 தொகுதிகளை கைப்பற்றி இரண்டாவது முறையாக ஆட்சியில் அமரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
மாநிலத்தின் அரசியல் தன்மையை பொறுத்த அளவில், என்னதான் ஆளும் மிசோ தேசிய முன்னணியுடன் பாஜக தேசிய அளவில் கூட்டணியில் இருந்தாலும், மாநிலத்திற்குள் இக்கட்சியுடன் இணைந்து போகமுடியாத நிலைமை உருவாகியுள்ளது. காரணம் மணிப்பூர் கலவரம்தான். மிசோரம் மாநிலத்தின் பூர்வகுடி மக்களுக்கும், மணிப்பூரின் குக்கி இன மக்களுக்கும் நெருங்கிய உறவு இருக்கிறது. இப்படி இருக்கையில் மிசோரம் பூர்வகுடி மக்கள் மத்திய அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
இதனை சமாளிக்கவே பாஜக தற்போது மிசோ தேசிய முன்னணியுடன் இணைந்து பயணிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக பிரதமர் மோடியுடன் தான் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய மாட்டேன் என மிசோரம் முதல்வரும் மிசோ தேசிய முன்னணி தலைவருமான ஜோரம்தங்கா பகிரங்கமாக அறிவித்திருந்தார். இந்த அதிருப்தியை காங்கிரஸ் அறுவடை செய்ய நினைக்கிறது. இருப்பினும் கருத்துக்கணிப்புகளை பார்க்கும்போதும் இங்கு தொங்கு சட்டசபை அமையும் என தெரிய வருகிறது.

எப்படி இருப்பினும் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர்தான் அனைத்தும் உறுதியாகும். வாக்கு பதிவுக்காக மொத்தம் 1,276 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று மாநிலத்தின் அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு தொடங்குவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. மிசோரம் மியான்மருடன் 510 கி.மீ, வங்கதேசத்துடன் 318 கி.மீ அளவில் எல்லையை பகிர்ந்துக்கொண்டிருப்பதால் எல்லையிலும் தீவிர கண்காணிப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன.
இன்று காலை 7 மணி அளவில் திட்டமிட்டபடி வாக்குபதிவு தொடங்கியது. மாநில முதல்வர் ஜோரம் தங்கா, ஐஸ்வால் வடக்கு 2 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்கு சாவடியில் வாக்குப்பதிவு செய்ய சென்றார். ஆனால் அங்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் அவரால் வாக்குப்பதிவு செய்ய முடியவில்லை. எனவே வாக்குச்சாவடியை விட்டு வெளியே வந்த அவர், தொகுதிக்கு சென்று நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். தற்போது இயந்திரம் சரி செய்யப்பட்டதையடுத்து அவர் வாக்களித்துள்ளார்.
-
திமுக - காங்கிரஸ்.. யார் அதிக இடங்களில் போட்டி? புதுச்சேரியில் தொடங்கியது பேச்சுவார்த்தை! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது











Click it and Unblock the Notifications