Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாகா எல்லையில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய தீவிரவாதி படம் வெளியீடு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த 2ம் தேதி வாகா எல்லையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2ம் தேதி வாகா எல்லையில் பாகிஸ்தான் பகுதியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 60 பேர் பலியாகினர். இந்த தாக்குதல் இந்தியாவை குறிவைத்து தவறுதலாக பாகிஸ்தான் பகுதியில் நடத்தப்பட்டது என்று செய்திகள் வெளியாகின.

Wagah Suicide Bomber's Picture Out

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் தெஹ்ரிக் இ தாலிபானில் இருந்து பிரிந்த செயல்படும் ஜமாத்துல் அஹ்ரார் அமைப்பு பொறுப்பேற்றது. இந்நிலையில் ஜமாத்துல் அஹ்ரார் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இஹ்சானுல்லா இஹ்சான் வாகா எல்லையில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவரின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

வாகாவில் பாகிஸ்தான் ராணுவம் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்திய சகோதரர் ஹனீபுல்லாவின்(ஹம்ஸா) புகைப்படங்கள் என்று தெரிவித்து அவரின் 2 புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

25 வயதான ஹனீபுல்லா பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் முகமந்த் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியைச் சேர்ந்தவர்.

இஹ்சானின் ட்விட்டர் கணக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு முடக்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை அவர் புதிய கணக்கு துவங்கி அதில் ஹனீபுல்லாவின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+