கர்நாடக ஐ.ஏ.எஸ் அதிகாரி டி.கே.ரவி மர்ம சாவு விவகாரத்தில் முதல் முடிச்சை அவிழ்த்த சிபிஐ!
பெங்களூர்: மர்மமான முறையில் உயிரிழந்த கர்நாடக ஐ.ஏ.எஸ் அதிகாரி டி.கே.ரவி, ரியல் எஸ்டேட் விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று சிபிஐ முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெங்களூருவில் பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி டி.கே.ரவி கடந்த மார்ச் மாதம் தனது குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ரியல் எஸ்டேட் மாபியாக்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுத்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததையடுத்து, பொதுமக்கள் வீதிக்கு வந்து போராடினர்.

இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. நெருக்கடிக்கு பயந்த சித்தராமையா அரசு, வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது. இந்நிலையில், சிபிஐ விசாரணையில் முக்கிய அம்சம் தெரியவந்துள்ளது.
அதாவது, ரியல் எஸ்டேட் தொழில் நடத்த ரவி திட்டமிட்டிருந்ததாகவும், பெங்களூர் அடுத்த சிக்கபள்ளாப்பூர் பகுதியில் 50 ஏக்கர் நிலம் வாங்க அவர் திட்டமிட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இந்த பிசினசுக்காக, தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்களிடமிருந்து பணம் வசூலித்துள்ளார் ரவி.
சிக்பள்ளாப்பூரில் நிலம் கையகப்படுத்துவதற்காக, அங்குள்ள நில உரிமையாளர்களுக்கு பணம் கொடுத்து செட்டில் செய்துள்ளார் ரவி. ஆனால், அதில் பெரும்பாலானோர் தலித்துகள் மற்றும் பழங்குடியினர் என்று கூறப்படுகிறது. சட்டப்படி, அவர்களிடமிருந்து நிலத்தை வாங்க முடியாது என்ற விவரம் ரவிக்கு பிறகுதான் தெரியவந்துள்ளது. இதையடுத்து பணத்தை திருப்பி கேட்டதற்கு பணமும் கிடையாது, நிலமும் கிடையாது என்று அவர்கள் கூறிவிட்டனராம்.
இந்நிலையில், பணம் கொடுத்தவர்கள் ரவியை நெருக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் ரவி தற்கொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது. மனைவியுடனான தனிப்பட்ட பிரச்சினைகள் தவிர்த்து நில விவகாரமும் தற்கொலைக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications