கேரள வெள்ளம்.. நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு பாகுபாடு.. ராகுல் புகார்
வயநாடு: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு இழப்பீடுத் தொகை வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த மாதம் கேரளாவில் கொட்டித்தீர்த்த கனமழையால் அம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக வயநாடு,மலப்புரம், உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு எற்பட்டு பலர் உயிரிழந்த சோக நிகழ்வும் நடந்தது. இந்நிலையில் வெள்ளத்திற்கு பிறகு வயநாடு தொகுதிக்கு நேற்று இரண்டாவது முறையாக சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார் ராகுல்காந்தி.

முகாம்
அடுத்த சில நாட்களுக்கு தனது தொகுதியான வயநாட்டில் முகாமிட்டு வெள்ள நிவாரண முகாம்களை பார்வையிட உள்ளதாக ராகுல் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணிகள் நிறைய செய்யப்பட்டுள்ளதாகவும், இருபினும் தானே அதனை நேரடியாக ஆய்வு செய்து நிவாரண பணிகளை இன்னும் முடுக்கிவிட உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மத்திய அரசு பாரபட்சம்
கேரளாவில் இயற்கை பேரிடரால் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து நிற்கதியாய் மக்கள் தவிக்கும் நேரத்தில் மத்திய அரசு பாரபட்சமாக நடந்துகொள்கிறது என ராகுல் புகார் கூறியுள்ளார். நேற்று வயநாட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேரிடர் சம்பவம் ஒரு துயரமான நிகழ்வு எனத் தெரிவித்துள்ளார்.

மக்கள்
வெள்ளத்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் இந்த நேரத்தில் கூட வயநாடு தொகுதி மக்கள் பெரிய மனதுடன் நடந்துகொள்வதாக கூறியிருக்கிறார். இழப்பீடு வழங்கவேண்டும் என்பது தான் தற்போதைய பிரதான விவகாரம் எனக் கூறியதோடு, மத்திய அரசு பாரபட்சத்துடன் செயல்படுவதாக புகார் தெரிவித்திருக்கிறார்.

மத்திய அரசுக்கு அக்கறையில்லை
கேரளாவில் பாஜக அதிகாரத்தில் இல்லை என்பதால், அம்மாநில மக்களை பற்றி மத்திய அரசுக்கு துளியும் அக்கறையில்லை என சாடியிருக்கிறார். இந்நிலையில் ராகுல் குற்றச்சாட்டுக்கு கேரளாவை சேர்ந்த மத்திய அமைச்சர் முரளீதரன் மறுப்பு தெரிவித்துள்ளதோடு பதிலடி தரவும் தயாராகி வருகிறார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications