மே.வங்கத்தில் நிறைவேறிய சட்ட மேலவை தீர்மானம்.. முதல்வராக நீடிக்க மம்தாவின் பிளான்.. பாஜக கொதிப்பு!

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபையில் இன்று சட்ட மேலவைக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் முதல்வர் மம்தா பானர்ஜி மேலவை உறுப்பினராக பதவி ஏற்று, 6 மாதங்களுக்குள் சட்டசபை இடைத்தேர்தலை சந்திக்காமலே முதல்வாராக நீடிக்க முடியும். பாஜகவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா அதிரடியாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

பீகார், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களில்தான் நாட்டில் சட்ட மேலவை உள்ளது. 2019-ம் ஆண்டு வரை ஜம்மு காஷ்மீரிலும் சட்டமேலவை இருந்தது.

மேற்கு வங்க சட்டசபை தேர்தலின் சட்டமேலவை உருவாக்கப்படும் என திரிணாமுல் காங்கிரஸ் உறுதி அளித்திருந்தது. இதனை நிறைவேற்றும் வகையில் இன்று மேற்கு வங்க சட்டசபையில் சட்ட மேலவையை உருவாக்குவதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

பாஜக கடும் எதிர்ப்பு

பாஜக கடும் எதிர்ப்பு

இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது முதல்வர் மமதா பானர்ஜி சட்டசபையில் இல்லை. இத்தீர்மானத்தை பாஜக கடுமையாக எதிர்த்தது. இந்த தீர்மானம் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவரான பாஜகவின் சுவேந்து அதிகாரி சட்ட மேலவை என்பது 23 உறுப்பினர்களைக் கொண்டது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் உட்பட 7,8 அமைச்சர்கள் தேர்தலில் தோல்வி அடைந்தனர்.

நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு

நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு

இப்போது சட்டமேலவை மூலம் கொல்லைப்புறமாக அவர்கள் நுழைய முயற்சிக்கின்றனர். இது ஆரோக்கியமானது அல்ல. நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ளது. எங்களைப் பொறுத்தவரை சட்ட மேலவையை நாங்கள் எதிர்ப்பதில் உறுதியாக உள்ளோம் என்றார்.

சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

இத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் 196 பேர் ஆதரவாகவும் 69 பேர் எதிர்ப்பாகவும் வாக்களித்தனர். பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்ததால் இத்தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் நாடாளுமன்றம் இதற்கு ஒப்புதல் தர வேண்டியுள்ளது.

மமதாவுக்கு நெருக்கடி

மமதாவுக்கு நெருக்கடி

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். வரும் நவம்பர் மாதத்துக்குள் மமதா பானர்ஜி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இல்லையெனில் பதவி விலக வேண்டும்.

சட்ட மேலவை முதல் கட்டம்

சட்ட மேலவை முதல் கட்டம்

கொரோனா பரவல் இருப்பதால் இடைத்தேர்தல்களை தேர்தல் ஆணையம் நடத்தவில்லை. இந்த நிலையில்தான் சட்ட மேலவையை உருவாக்கி எம்.எல்.சியாகும் முயற்சிகளை மமதா மேற்கொண்டுள்ளார். இதன் முதல் கட்டமாக சட்டசபையில் சட்ட மேலவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளிக்க வேண்டும் என்பதால், மத்திய அரசு என்ன முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+