மே.வங்க விவகாரம்... நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்- மருத்துவ சேவைகள் கடும் பாதிப்பு
Recommended Video
கொல்கத்தா/ டெல்லி; மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்பட்டதைத் கண்டித்து நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவாக இன்று நாடு முழுவதும் லட்சக்கணக்கான மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கொல்கத்தாவில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவரை நோயாளியின் உறவினர் தாக்கினார். இதனையடுத்து மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

மேற்கு வங்கத்தில் ஏற்கனவே ஆளும் திரிணாமுல் அரசுக்கு எதிராக பாஜகவினர் ஒருபக்கம் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பயிற்சி மருத்துவர்களை பாஜகதான் தூண்டுவதாக கூறி முதல்வர் மமதா பானர்ஜி கடும் எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.
மருத்துவர்கள் உடனே பணிக்கு திரும்ப காலக்கெடு விதித்தார் மமதா பானர்ஜி. ஆனால் அதை நிராகரித்து மருத்துவர்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று அகில இந்திய மருத்துவ கவுன்சில் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபடுவார்கள் என அறிவித்தது. இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
லட்சக்கணக்கான மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்ததால் மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சில மருத்துவர்கள் தலையில் காயக்கட்டு போட்டு அடையாள போராட்டத்தை மேற்கொண்டனர்.












Click it and Unblock the Notifications