கவுரி லங்கேஷ் கொலையாளிகளை கண்டுபிடித்துவிட்டோம்: கர்நாடக அமைச்சர்
பெங்களூரு: மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷை கொலை செய்தவர்களை கண்டுபிடித்துவிட்டதாக கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.
மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் கவுரி கொலை குறித்து கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியிருப்பதாவது,
கவுரி கொலையாளிகள் குறித்து துப்பு கிடைத்துள்ளது. ஆனால் துப்பு குறித்து சரியான ஆதாரங்கள் கிடைக்கும் வரை இது பற்றி மீடியாவிடம் எதுவும் கூற முடியாது.
சரியான ஆதாரங்கள் கிடைக்காமல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தால் அது செல்லாது. அதனால் ஆதாரங்களை சேகரிக்க முயன்று வருகிறோம். கவுரியை யார் கொலை செய்தது என்று எங்களுக்கு தெரிந்துவிட்டது என்றார்.