இது டிவிட்டரில் மட்டுமே இயங்கும் அரசு.. மோடியைக் கிண்டலடிக்கும் நிதீஷ் குமார்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: மத்தியில் இருப்பது டிவிட்டரில் மட்டுமே இயங்கக் கூடிய, டிவிட்ரில் மட்டுமே பதிலளிக்கக் கூடிய அரசு என்று பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கிண்டலடித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஒரு டிவிட் போட்டுள்ளார். அதில், இறுதியாக நாம் ஒரு அரசை பெற்றுள்ளோம். அதை யூனியன் டிவிட்டர் கவர்ன்மென்ட் என்று கூறலாம். காரணம் இது டிவிட்டரில்தான் பேசுகிறது, டிவிட்டரில்தான் பதிலளிக்கிறது, டிவிட்டரில்தான் இயங்குகிறது என்று வாரியுள்ளார் நிதீஷ் குமார்.

மேலும் இதற்கு முன்பு மோடிக்கு அனுப்பிய பல்வேறு கேள்விகளையும் டிவிடிட்டரில் போட்டு இப்போதாவது பதில் சொல்லுங்கள் என்றும் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார் நிதீஷ் குமார்.

பீகார் சட்டசபைத் தேர்தலையொட்டி ஜூலை 254ம் தேதி முசாபர்பூரில் நடந்த கூட்டத்தில் மோடியும், அமீத் ஷாவும் கலந்து கொண்டு பேசினர். அப்போது நிதீஷ் குமாரின் டிஎன்ஏ சரியில்லை என்று கூறியிருந்தார் மோடி. இதற்குப் பதிலடி கொடுத்த நிதீஷ் குமார், பீகார் மக்களுக்கு உள்ள அதே டிஎன்ஏதான் எனக்கும் உள்ளது. தங்களது டிஎன்ஏவை அவமதித்தவர்களை என்ன செய்ய வேண்டும் என்பது பீகார் மக்களுக்குத் தெரியும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று கயா நகருக்கு பிரதமர் மோடியும், ஷாவும் வருகை தரவுள்ளனர். இந்தப் பின்னணியில் டிவிட்டரில் அட்டாக் செய்துளார் நிதீஷ் குமார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+