ஜெ. தீர்ப்பு.. கர்நாடகத்தில் எந்த அசம்பாவிதமும் நடக்க அனுமதிக்க மாட்டோம்- சித்தராமையா
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு எதிரொலியாக கர்நாடகத்தில் எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்க அனுமதிக்க மாட்டோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், தமிழக முதல்வர் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிரொலியாக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறையிலும், எல்லைப் பகுதியிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்க அனுமதிக்க மாட்டோம் என்று சித்தராமையா கூறியுள்ளார்.
ஜெயலலிதா தீர்ப்பையொட்டி கர்நாடகத்தில் கிட்டத்தட்ட 5000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications