For Quick Alerts
For Daily Alerts
Just In
மேற்கு வங்கத்தில் ரயில் மோதி குட்டி உட்பட 3 யானைகள் பலி!
பங்குரா: மேற்குவங்க மாநிலத்தில் ரயில் தண்டவளத்தை கடக்க முயன்ற யானைகள் மீது அதிவேகமாக வந்த ரயில் மோதியல் 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
மேற்குவங்க மாநிலம் பங்குரா மாவட்டத்தில் பிஷ்ணுபூர் அருகே நேற்றிரவு தண்டவாளத்தை கடக்க 3 யானைகள் முயன்றன. அப்போது அதிவேகமாக வந்த பயணிகள் ரயில் அந்த யானைகள் மீது மோதியது.
இந்த விபத்தில் 2 பெண் யானைகள் மற்றும் ஒரு குட்டி யானை உட்பட 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
இந்த விபத்து காரணமாக அப்பகுதி வழியாக இயக்கப்படும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் புருலியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில பயணிகள் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments
English summary
Three elephants were killed after a passenger train ran over them near Bishnupur of West Bengal's Bankura district on Friday night.
Story first published: Saturday, August 27, 2016, 11:27 [IST]