ரயில் கட்டண உயர்வை உடனே திரும்பப் பெறுக: மே. வங்க சட்டசபையில் தீர்மானம்!
கொல்கத்தா: மத்திய அரசின் ரயில் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும் உடனே திருமப் பெற வலியுறுத்தியும் மேற்கு வங்க சட்டசபையில் அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பயணிகள் ரயில் கட்டணம் 14.2%; சரக்கு கட்டணம் 6.5% உயர்த்தப்பட்டது. இது நாளை மறுநாள் முதல் அமலுக்கு வருகிறது. இக் கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ரயில் கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரியும் மேற்கு வங்க சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த இத்தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் ஆதரித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ. அனிசூர் ரகுமன், ரயில் கட்டணம் உயர்வு ஜனநாயகமற்றது மற்றும் தகுதியற்ற முறையில் உயர்த்தப்பட்டுள்ளது என்று திருத்தம் கொண்டுவரப்பட்டது. அந்த திருத்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பின்னர் ஒரு மனதாக இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications