ரஜினிகாந்தின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்.. மேற்கு வங்க ஆளுநர் பரபர தகவல்!
கொல்கத்தா: ரஜினிகாந்துக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது என மேற்கு வங்க ஆளுநர் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்துக்கு சின்னக் குழந்தை முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்த விஷயமே. அதனால்தான் அவரது பேச்சுக்கள் எதுவாக இருந்தாலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் ஒரு சில அரசியல்வாதிகள் ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கர் கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் பேட்டி அளித்தார்.

லட்சக்கணக்கான ரசிகர்கள்
அவரிடம் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அவர் கூறுகையில் ரஜினிகாந்துக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்களில் நானும் ஒருவன்.

முறியடித்தல்
அவரது ஸ்டைல், நடிப்பு இவை எனக்கு ரொம்ப பிடிக்கும். ரஜினியை பிடிக்காதவர்கள் யாரேனும் இருப்பார்களா என்ன? அவரது சாதனையை யாராலும் முறியடிக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது.

கணிக்க முடியாது
அண்மையில் வெளியான அவரது படங்களை நான் பார்த்தேன். அவர் அரசியலுக்கு வரவுள்ளதையும் பத்திரிகைகள் மூலம் தெரிந்து கொண்டேன். அவர் அரசியலுக்கு வந்தால் அவரது எதிர்காலம் எப்படி இருக்கும் என என்னால் கணிக்க முடியாது.

குற்றச்சாட்டு
ஆனால் அவருக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது. இதைவிட வேறு என்ன வேண்டும்? என்று கூறிய ஜெகதீப், முதல்வர் மம்தா பானர்ஜி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications