21 திரிணாமுல் காங். எம்.எல்.ஏக்களுக்கு பாஜக ஸ்கெட்ச்? மிதுன் சக்கரவர்த்தி பேச்சால் பரபரப்பு!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்கும் வகையில் 21 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தமது கட்சி வளைத்துக் கொண்டிருப்பதாக பாஜகவின் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக அல்லாத மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆளும் அரசாங்கத்தை கவிழ்ப்பதில் பாஜக தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜகவின் இந்த ஆபரேஷன் தாமரை என்ற அரசியல் சித்து விளையாட்டுகள் அரங்கேறி இருக்கின்றன.

அண்மைகாலமாக டெல்லி, பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசுகளைக் கவிழ்ப்பதில் பாஜக தீவிரம் காட்டுவதாக அக்கட்சி எம்.எல்.ஏக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இதனை பகிரங்கமாக கூறி இருந்தார். ஒவ்வொரு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வுக்கும் தலா ரூ20 கோடி தருவதாக பாஜக பேரம் பேசுகிறது எனவும் கூறப்பட்டது. இதேபோல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆட்சியைக் கவிழ்க்கவும் பாஜக பேரம் பேசுவதாக கூறப்பட்டது. இதனால் தமது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் அண்டை மாநிலத்துக்கு தப்பி சென்றார் ஹேமந்த் சோரன்.
மேற்கு வங்க மாநிலத்திலும் கடந்த சில ஆண்டுகளாகவே ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களை எப்படியாவது வளைக்கலாம் என கணக்குப் போட்டு வருகிறது பாஜக. ஆனால் பாஜக எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள்தான் திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவி வருகின்றனர். ஒருசில நேரங்களில் அடுத்த நிமிடமே மமதா ஆட்சி கவிழப் போகிறது என்ற போக்கில் 50 எம்.எல்.ஏக்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கின்றனர் என்றெல்லாம் பாஜக தலைவர்கள் அடித்து விடுவது வழக்கமாகிவிட்டது.
இந்நிலையில் பாஜகவின் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அக்கூட்டத்தில் பேசிய மிதுன் சக்கரவர்த்தி, திரிணாமுல் காங்கிரஸின் 21 எம்.எல்.ஏக்கள் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் கூறியிருந்தேன். அதில் இப்போதும் நான் உறுதியாகவே இருக்கிறேன். மமதா பானர்ஜியால் 5 ஆண்டுகாலம் ஆட்சி செய்ய முடியாது. 2024-ம் ஆண்டு முன்னதாகவே மமதா ஆட்சி கவிழ்ந்துவிடும் என்றார்.
ஆனால் மிதுன் சக்கரவர்த்திக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பதிலடி தந்துள்ளது. இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் குணால் கோஷ் கூறுகையில், பாஜக எம்.எல்.ஏக்களைப் போல விற்பனைக்குரியவர்கள் அல்ல எங்கள் திரிணாமுல் எம்.எல்.ஏக்கள். இது பாஜகவில்தான் பஞ்சாயத்தை ஏற்படுத்தும் என்றார்.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications