சொன்னதைச் செய்யும் தலைவர் நரேந்திர மோடி: ஸ்மிரிதி இராணி

ஸ்மிரிதி இராணி, குஜராத்தைச் சேர்ந்த பாஜக எம்.பியும் ஆவார். இவர் சாஸ் பி கபி பஹு தி என்ற டிவி சீரியல் மூலம் பிரபலமானவர் .
அகமதாபாத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூறியதாவது:
ராஜீவ் காந்தி காலம் எல்லாம் போய் விட்டது. முதல்வர் நரேந்திர மோடி தான் சொன்னதைச் செய்கிறார். அவர் செய்வதை இங்குள்ள பெண்கள் பாராட்டுகிறார்கள்.
வெறுமனே அவர் கவர்ச்சிக்காக எதையும் செய்வதில்லை. மாறாக உண்மையிலேயே அனைவருக்கும் பயன்படியான திட்டங்களைத்தான் நிறைவேற்றுகிறார். இதுதான் பெண்களைக் கவர்ந்துள்ளது.
பெண்கள் யாரும் நம்ப மாட்டார்கள். அப்படி நம்பி விட்டால் கடைசி வரை அவர்களுக்குத் துரோகம் செய்ய மாட்டார்கள். விசுவாசமாக இருப்பார்கள். பெண்கள் சுயமாக எதையும் செய்வதில்லை, வீட்டில் உள்ள ஆண்களின் ஆதிக்கத்தின் கீழ்தான் அவர்கள் செயல்படுகிறார்கள் என்று தவறான ஒரு கருத்து நிலவி வருகிறது. அது தவறு.
2 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 25 பெண்களை நான் குஜராத் அழைத்து வந்தேன். மாநிலம் முழுவதும் அவர்கள் சுற்றிப் பார்த்தனர். பின்னர் நரேந்திர மோடியை அவர்கள் சந்தித்தனர். அப்போது எது சரியாக இருக்கிறது, எது இல்லை என்று அவர்களிடம் கேட்டார் மோடி. அப்போது பெண்கள் கூறிய கருத்துக்களையும், யோசனைகளையும் அவர் உன்னிப்புடன் கேட்டுக் கொண்டார்.
பெண்களின் கருத்துக்கு மதிப்பு கொடுத்து உண்மையான அக்கறையுடன் அவர் கேட்டார். மேலும் அவர்கள் சொன்ன பல யோசனைகளை உடனடியாக அமல்படுத்தவும் அவர் உத்தரவிட்டார் என்றார் ஸ்மிரிதி இராணி.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!












Click it and Unblock the Notifications