சொன்னதைச் செய்யும் தலைவர் நரேந்திர மோடி: ஸ்மிரிதி இராணி

ஸ்மிரிதி இராணி, குஜராத்தைச் சேர்ந்த பாஜக எம்.பியும் ஆவார். இவர் சாஸ் பி கபி பஹு தி என்ற டிவி சீரியல் மூலம் பிரபலமானவர் .
அகமதாபாத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூறியதாவது:
ராஜீவ் காந்தி காலம் எல்லாம் போய் விட்டது. முதல்வர் நரேந்திர மோடி தான் சொன்னதைச் செய்கிறார். அவர் செய்வதை இங்குள்ள பெண்கள் பாராட்டுகிறார்கள்.
வெறுமனே அவர் கவர்ச்சிக்காக எதையும் செய்வதில்லை. மாறாக உண்மையிலேயே அனைவருக்கும் பயன்படியான திட்டங்களைத்தான் நிறைவேற்றுகிறார். இதுதான் பெண்களைக் கவர்ந்துள்ளது.
பெண்கள் யாரும் நம்ப மாட்டார்கள். அப்படி நம்பி விட்டால் கடைசி வரை அவர்களுக்குத் துரோகம் செய்ய மாட்டார்கள். விசுவாசமாக இருப்பார்கள். பெண்கள் சுயமாக எதையும் செய்வதில்லை, வீட்டில் உள்ள ஆண்களின் ஆதிக்கத்தின் கீழ்தான் அவர்கள் செயல்படுகிறார்கள் என்று தவறான ஒரு கருத்து நிலவி வருகிறது. அது தவறு.
2 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 25 பெண்களை நான் குஜராத் அழைத்து வந்தேன். மாநிலம் முழுவதும் அவர்கள் சுற்றிப் பார்த்தனர். பின்னர் நரேந்திர மோடியை அவர்கள் சந்தித்தனர். அப்போது எது சரியாக இருக்கிறது, எது இல்லை என்று அவர்களிடம் கேட்டார் மோடி. அப்போது பெண்கள் கூறிய கருத்துக்களையும், யோசனைகளையும் அவர் உன்னிப்புடன் கேட்டுக் கொண்டார்.
பெண்களின் கருத்துக்கு மதிப்பு கொடுத்து உண்மையான அக்கறையுடன் அவர் கேட்டார். மேலும் அவர்கள் சொன்ன பல யோசனைகளை உடனடியாக அமல்படுத்தவும் அவர் உத்தரவிட்டார் என்றார் ஸ்மிரிதி இராணி.
-
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications