காதை பிளக்கும் சத்தம்.. நொடிகளில் கிளம்பிய புகை.. நேபாள விமான விபத்தில் என்ன நடந்தது? கிராமவாசி பரபர
காத்மண்டு: நேபாளத்தில் கொடூரமான விமான விபத்து அரங்கேறியுள்ள நிலையில், விபத்து நடந்த போது என்ன நடந்தது என்பது குறித்த தகவல்களை அருகே இருக்கும் கிராம வாசிகள் சிலர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
நேபாளத்தில் இன்று நடந்த மிக விமான விபத்து மிக மோசமான ஒன்றாக மாறிவிட்டது. ஏடிஆர்- 72 பயணிகள் விமானம் நேபாளத்தின் பொகாராவில் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் மொத்தம் 72 பேர் பயணித்துள்ளனர்.
கடந்த 30 ஆண்டுகளில் நேபாளத்தில் நடந்த மிக மோசமான விபத்தாக இது உள்ளது. இதுவரை இந்த விபத்தில் 68 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

விபத்து
விமானம் தரையிறங்க சில நிமிடங்களே இருந்த நிலையில், திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் விமானம் அங்குள்ள வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. விமானம் விழுந்த உடனேயே அங்கு மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி முழுக்க கருப்பு புகை எழுந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் இறங்கியுள்ளனர். இதனிடையே விபத்து நடந்த போது அங்கு என்ன நடந்து என்பது குறித்த தகவல்களை அந்த கிராம மக்கள் பகிர்ந்துள்ளனர்.

ஆற்றின் கரை
விமான விபத்து நடந்த உடன் அங்கிருந்த மக்களைக் காப்பாற்ற அருகே உள்ள கிராம மக்கள் அங்கு விரைந்தனர். விமானம் அங்கே உள்ள சேதி ஆற்றின் கரையில் விழுந்துள்ளது. இங்கு ஆற்றின் கரையில் நிலப்பரப்பு சேறும் சகதியுமாக இருந்ததாகவும் இது மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ளத் தடையாக இருந்தது என்று விபத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார். இந்த விபத்தில் 5 இந்தியர்கள் உட்பட 72 பேர் பயணித்துள்ளனர். இதில் 68 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

கிராமவாசி
மத்திய நேபாளத்தின் பொக்காராவில் புதிதாகத் திறக்கப்பட்ட விமான நிலையத்தில் தரையிறங்கும் போது இந்த விமானம் ஆற்றின் அருகே விழுந்து நொறுங்கியுள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் அருண் தாமு இது குறித்துக் கூறுகையில், "நாங்கள் வழக்கம் போல எங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.. அப்போது எங்கிருந்தோ திடீரென ஒரு பலத்த சத்தம் கேட்டது. இதையடுத்து சத்தம் கேட்ட இடத்தை நோக்கி நாங்கள் சென்றோம். கிராமத்தில் மக்கள் தொகை குறைவு நாங்கள் அனைவருமே அங்குச் சென்றோம்.

12 பேரை மீட்டோம்
நாங்கள் அங்குச் சென்றவுடன் பாதிக்கப்பட்டோரை மீட்கும் பணிகளைத் தொடங்கிவிட்டோம். இருப்பினும், சம்பவ இடத்திற்கு போலீசார் வரக் கொஞ்ச நேரம் பிடித்தது. நாங்கள் தண்ணீர் வாளிகளைக் கொண்டு வந்து தீயை அணைக்க முயன்றோம். விமான இடிபாடுகளில் இருந்து நாங்கள் 10-12 பேரைக் காப்பாற்றினோம்.. அவர்களில் இருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருந்தது. விமானம் சேதி ஆற்றின் கரையில் விழுந்தது. துரதிர்ஷ்டவசமாக அது சேறும் சகதியும் நிரம்பிய ஒரு நிலப்பரப்பு.. இதனால் அங்கு மீட்புப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன..

என்ன சிக்கல்
விபத்து நடந்த இடத்திற்கு அருகில் செல்வதிலேயே கிராமவாசிகளுக்குச் சிரமமாக இருந்தது. நெருப்பு அதிகமாக இருந்ததால் எங்களால் அருகே செல்ல முடியவில்லை. மற்றொரு பக்கம் சேதி ஆற்றில் அடித்துச் செல்லப்படும் அபாயமும் இருந்தது. விமானத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கச் செல்லும்போது, நாங்கள் பள்ளத்தாக்கில் விழுந்துவிடுவோம் என்ற அச்சமும் இருந்தது. போலீசார் வந்த பிறகு தான் மீட்புப் பணிகள் வேகமெடுத்தது" என்று அவர் தெரிவித்தார்.

விமான விபத்து
எட்டி ஏர்லைன்ஸுக்கு சொந்தமான இந்த ATR-72 விமானம் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 10:33 மணிக்கு புறப்பட்டது. அது பழைய விமான நிலையத்திற்கும் புதிய விமான நிலையத்திற்கும் நடுவே உள்ள சேதி ஆற்றின் கரையில் விழுந்து நொறுங்கியதாகக் கூறப்படுகிறது. இதுவரை 68 பேரின உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த விபத்தில் இதுவரை யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications