நீங்க குழந்தை திருமணம் பண்ணுங்க.. பாஜக பாதுகாப்பு தரும்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி வாக்குறுதி!
ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றால், குழந்தை திருமணத்தை ஆதரிப்பேன், அதற்கு முழு பாதுகாப்பு அளிப்பேன் என்று பாஜகவை சேர்ந்த வேட்பாளர்கள் வாக்குறுதி அளித்து இருக்கிறார்கள்.
Recommended Video

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றால், குழந்தை திருமணத்தை ஆதரிப்பேன், அதற்கு முழு பாதுகாப்பு அளிப்பேன் என்று பாஜகவை சேர்ந்த வேட்பாளர்கள் வாக்குறுதி அளித்து இருக்கிறார்கள்.
தமிழகம் குழந்தை திருமணம் என்ற கொடூரத்தை எல்லாம் தாண்டி வந்து பல காலம் ஆகிவிட்டது. ஆனால் வடமாநிலங்கள் இன்னும் அந்த பிரச்சனையில்தான் சிக்கி தவித்து வருகிறது.
முக்கியமாக ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த பிரச்சனை பெரிய அளவில் உள்ளது. இந்த நிலையில் ராஜஸ்தானில் டிசம்பர் 7ம் தேதி நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக பிரச்சாரம் செய்த பாஜக வேட்பாளர் ஒருவர் கூறிய வாக்குறுதி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

என்ன வாக்குறுதி
பாஜகவை சேர்ந்த மூத்த உறுப்பினர் சோபா சவுகான்தான் இந்த வாக்குறுதியை அளித்தது. அதன்படி தான் தேர்தலில் வெற்றிபெற்று எம்எல்ஏ ஆகும் பட்சத்தில் ராஜஸ்தானில் குழந்தை திருமணம் நடத்த ஆதரவு தருவேன், நானே குழந்தை திருமணங்களை நடத்தி வைப்பேன். போலீஸ் தொல்லை இல்லாமல் குழந்தை திருமணம் நடக்க ஆதரவு அளிப்பேன் என்று கூறினார்.

மக்கள் கொண்டாட்டம்
இவரின் வாக்குறுதியை கேட்டு அங்கிருந்த பாஜகவினர் உற்சாகம் ஆனார்கள். ஆம், இந்த வாக்குறுதியை கேட்டு அங்கு பாஜகவினர் பெரிய அளவில் கைதட்டி கூச்சலிட்டனர். இதனால் நேற்று வேறு சில பிரச்சாரங்களில் இதே வாக்குறுதி வேறு சில பாஜக உறுப்பினர்களால் வழங்கப்பட்டது.

யார் தெரியுமா
இந்த வாக்குறுதியை வழங்கிய சோபா சவுகான் ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் சவுகான் ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி இவர். அதேபோல் ராஜஸ்தான் பாஜக தலைமைக்கு மிக மிக நெருக்கமானவர்.

பாஜகவிற்கு எதிர்ப்பு
பாஜகவின் இந்த வாக்குறுதி பெரிய எதிர்பலைகளை சந்தித்து இருக்கிறது. இப்படி வாக்குறுதி அளித்த வேட்பாளர்களுக்கு பாஜக கட்சி ஆதரவு அளித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications