3 பொண்டாட்டி... நான்கைந்து பிள்ளைகள் என முதல்வர் ஜெகன் பேச்சு.. பவன் கல்யாண் ஆவேசம்
Recommended Video
விஜயவாடா: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் தெலுங்கின் பிரபல நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் இடையே வார்த்தை போர் முற்றியுள்ளது, நான் மூன்று திருமணம் செய்தது தான் நீங்கள் ஜெயிலுக்கு போக காரணமா என்று பவன் கல்யாண் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஆந்திராவில் அடுத்த கல்வியாண்டில் இருந்து 1முதல் 6ம் வகுப்பு வரை பள்ளிகளில் ஆங்கிலத்தை பயிற்று மொழியாக்கப்படும் என்றும், தெலுங்கு உருது கட்டாயமொழி ஆக்கப்படும் என்றும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதற்கு தெலுங்குதேசம் தலைவர் சந்திராபு நாயுடு, துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் உள்ளிட்ட பலர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
காற்று மாசைக் குறைக்க ஜப்பான் தொழில்நுட்பம்.. கை கொடுக்குமா.. தீவிர யோசனையில் மத்திய அரசு!
3 மனைவிகள்
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று பேசிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, "சந்திரபாபு நாயுடு உங்கள் மகன் எந்த பள்ளியில் படித்தார்? நாளை உங்கள் பேரன் எந்த பள்ளியில் படிக்க போகிறார்? வெங்கையா நாயுடு அவர்களே உங்கள் மகனும், பேரனும் எந்த பள்ளியில் படித்தார்கள்? 3 மனைவி, நான்கைந்து பிள்ளைகள் கொண்ட பவன் கல்யாணின் குழந்தைகள் எந்த பள்ளியில் படிக்கிறார்கள்?
ஆங்கிலம் கட்டாயம்
ஆங்கில வழிக்கல்வியை எதிர்க்கும் இவர்கள் நெஞ்சில் கைவைத்து பதில் சொல்ல வேண்டும். இன்றைய சவால் நிறைந்த உலகில் போட்டிபோட ஆங்கில வழிக்கல்வி கட்டாயம் என்பதற்காக இந்த திட்டத்தை தொடங்குகிறேன்" என்றார்.
துரதிர்ஷ்டவசமானது
இந்நிலையில் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகள் குறித்து விமர்சித்தற்காக கோபம் அடைந்த நடிகர் பவன் கல்யாண், அரசாங்கத்தை கேள்வி கேட்டதற்காக ஜெகன் மோகன் ரெட்டி,இப்படி தனிப்பட்ட தாக்குதல்களை மேற்கொண்டது துரதிர்ஷ்டவசமானது.
திருமணம் காரணமா
"நான் மூன்று பெண்களை மணந்தேன் என்று நீங்கள் மீண்டும் மீண்டும் சொல்கிறீர்கள். எனது திருமணங்களில் உங்களுக்கு என்ன பிரச்சினை. என் திருமணங்களால்தான் நீங்கள் இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தீர்களா" என்று பவன் கல்யாண் முதல்வர் ஜெகனுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.