மகாராஷ்டிரா: குழந்தை கடத்துவோர் என்ற சந்தேகத்தில் 5 பேர் அடித்துக் கொலை
மகாராஷ்டிர மாநிலம் துளே மாவட்டத்தில், குழந்தை கடத்த வந்தவர்கள் என்ற சந்தேகத்தில் 5 நபர்கள் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.
ரெய்ன்படா பகுதியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணியளவில் 5 நபர்கள் அங்கு வந்து இறங்கியுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்திய அப்பகுதி மக்கள், அந்த 5 நபர்களும் குழந்தை கடத்தலில் ஈடுபடுபவர்கள் என்று சந்தேகித்தனர்.
கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை என்றவுடன், அவர்களை மக்கள் தாக்க ஆரம்பித்தனர். உயிரிழந்த 5 நபர்களும் மகாராஷ்டிர மாநிலம் சோலாபூரை சேர்ந்தவர்கள்.
இச்சம்பவம் குறித்து பேசிய துளே மாவட்ட எஸ்.பி ராம்குமார், "அந்த 5 நபர்களும் குழந்தை கடத்த வந்தவர்கள் என்று சந்தேகித்து கிராம மக்கள் தாக்கியதாக" கூறினார்.
கிராம மக்களின் கேள்விகளுக்கு அவர்கள் சரியாக பதிலளிக்காததை தொடர்ந்து ஒரு அறையில் வைத்து அந்த 5 நபர்களையும் பூட்டி, கற்கள் மற்றும் கம்பிகளால் அவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற போலீஸாரையும் அக்கும்பல் தாக்கியுள்ளது.
- சந்தேகத்தின் பெயரால் கொலை: வதந்திகளால் பறிபோகும் அப்பாவி உயிர்கள்
- ஜார்க்கண்ட் : குழந்தை கடத்தல் கும்பல் என சந்தேகிக்கப்பட்ட 6 பேர் அடித்து கொலை
இந்நிலையில் பாதிக்கப்பட்ட 5 நபர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர்கள் வரும் போதே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிற செய்திகள்:
- டெல்லி: 'ஒரே இடத்தில் 11 சடலங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்' #GroundReport
- அமெரிக்கா: 200 முறை தோற்கடிக்கப்பட்ட 'கும்பல் கொலை' எதிர்ப்பு மசோதா
- மெஸ்ஸி, ரொனால்டோ அணிகள் வெளியேற்றம்: முடிந்ததா ஜாம்பவான்கள் சகாப்தம்?
- "ஸ்டெர்லைட் அருகிலுள்ள ஊர்களின் நிலத்தடி நீர் குடிக்க, பாசனத்துக்கு ஏற்றதல்ல"
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications