மகாராஷ்டிரா: குழந்தை கடத்துவோர் என்ற சந்தேகத்தில் 5 பேர் அடித்துக் கொலை
மகாராஷ்டிர மாநிலம் துளே மாவட்டத்தில், குழந்தை கடத்த வந்தவர்கள் என்ற சந்தேகத்தில் 5 நபர்கள் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.
ரெய்ன்படா பகுதியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணியளவில் 5 நபர்கள் அங்கு வந்து இறங்கியுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்திய அப்பகுதி மக்கள், அந்த 5 நபர்களும் குழந்தை கடத்தலில் ஈடுபடுபவர்கள் என்று சந்தேகித்தனர்.
கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை என்றவுடன், அவர்களை மக்கள் தாக்க ஆரம்பித்தனர். உயிரிழந்த 5 நபர்களும் மகாராஷ்டிர மாநிலம் சோலாபூரை சேர்ந்தவர்கள்.
இச்சம்பவம் குறித்து பேசிய துளே மாவட்ட எஸ்.பி ராம்குமார், "அந்த 5 நபர்களும் குழந்தை கடத்த வந்தவர்கள் என்று சந்தேகித்து கிராம மக்கள் தாக்கியதாக" கூறினார்.
கிராம மக்களின் கேள்விகளுக்கு அவர்கள் சரியாக பதிலளிக்காததை தொடர்ந்து ஒரு அறையில் வைத்து அந்த 5 நபர்களையும் பூட்டி, கற்கள் மற்றும் கம்பிகளால் அவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற போலீஸாரையும் அக்கும்பல் தாக்கியுள்ளது.
- சந்தேகத்தின் பெயரால் கொலை: வதந்திகளால் பறிபோகும் அப்பாவி உயிர்கள்
- ஜார்க்கண்ட் : குழந்தை கடத்தல் கும்பல் என சந்தேகிக்கப்பட்ட 6 பேர் அடித்து கொலை
இந்நிலையில் பாதிக்கப்பட்ட 5 நபர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர்கள் வரும் போதே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிற செய்திகள்:
- டெல்லி: 'ஒரே இடத்தில் 11 சடலங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்' #GroundReport
- அமெரிக்கா: 200 முறை தோற்கடிக்கப்பட்ட 'கும்பல் கொலை' எதிர்ப்பு மசோதா
- மெஸ்ஸி, ரொனால்டோ அணிகள் வெளியேற்றம்: முடிந்ததா ஜாம்பவான்கள் சகாப்தம்?
- "ஸ்டெர்லைட் அருகிலுள்ள ஊர்களின் நிலத்தடி நீர் குடிக்க, பாசனத்துக்கு ஏற்றதல்ல"
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications