இந்தியாவில் வாட்ஸ் அப் யூசர்கள் எண்ணிக்கை “7 கோடி”!
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்தியாவில் செல்போன் மூலமாக வாட்ஸ் அப் சேவையினை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கிட்டதட்ட 7 கோடியாக உயர்ந்துள்ளதாக அந்நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேச அளவில் இந்த சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கையைக் காட்டிலும் இது அதிகம் என்று இந்நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவுத் தலைவர் நீரஜ் அரோரா தெரிவித்தார்.

அவர், "எங்களது வாடிக்கையாளர்களாக உள்ள 7 கோடி பேரில் மாதத்துக்கு ஒருமுறையாவது பயன்படுத்துவோரும் உள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் அப் நிறுவனத்தை சமீபத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் 1,900 கோடி டாலருக்கு வாங்கியது.
அப்போது 6 கோடியாக இருந்த இந்திய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை இப்போது 7 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால், வாட்ஸ் அப் நிறுவனத்தில் மொத்தம் 80 பணியாளர்கள்தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications