ஏவுகணை சோதனை தீவுக்கு ஏவுகணை மனிதர் பெயர்... வீலர் தீவுக்கு கலாம் பெயர் சூட்டி ஒரிசா அரசு கவுரவம்
புவனேஷ்வர் : ஏவுகணை சோதனை மையமான வீலர் தீவுக்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பெயரை சூட்டி ஒடிசா அரசு கவுரவப்படுத்தியுள்ளது.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவைப் போற்றும் விதமாக பல்வேறு மாநிலங்கள் அவருடைய பெயரை கல்வி நிறுவனங்கள், சாலைகள், அரசு அலுவலகங்கள், பூங்காக்கள் மற்றும் கட்டிடங்களுக்கு சூட்டி கவுரவித்து வருகின்றன.

டெல்லியில் உள்ள அவுரங்கசீப் சாலைக்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்று மாநகராட்சி அறிவித்தது.
இந்நிலையில் ஒரிசா அரசும் அப்துல் கலாமை பெருமைப்படுத்தும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் இருந்து 150 கிலோ மீட்டர் தூரத்தில் பாலாசூர் அருகே உள்ள ஏவுகணை சோதனை மையமான வீலர் தீவுக்கு அப்துல்கலாம் பெயரை அம்மாநில அரசு சூட்டிஉள்ளது. ஏவுகணை மனிதர் என்று அழைக்கப்படும் அப்துல்கலாமை பெருமைபடுத்தவே அவரது பெயர் சூட்டப்படுள்ளதாக ஒடிசா அரசு அறிவித்துள்ளது.
ஒடிசா மாநிலம் பாலாசூர் அருகேஉள்ள வீலர் தீவு இந்தியாவின் மிகவும் முக்கியமான ஏவுகணை சோதனை செய்யும் தளம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீவு ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.












Click it and Unblock the Notifications