அன்று கர்நாடகா உயர்நீதிமன்றத்திலும் கண்ணீர்சிந்திய தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர்
பெங்களூர்: நாட்டின் நீதிபதிகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் முன்வைத்த கண்ணீருடன் உருக்கமாக வேண்டுகோள் வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் 2004-ம் ஆண்டு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் இருந்து டெல்லிக்கு மாற்றலானபோதும் டி.எஸ். தாக்கூர் கண்ணீர்சிந்தியதை நினைவுகூறுகின்றனர் பெங்களூரு பத்திரிகையாளர்கள்.
கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் 1994-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை நீதிபதியாக பணியாற்றினார் டி.எஸ். தாக்கூர். பின் 2004-ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு அவர் இடம்மாற்றம் செய்யப்பட்டார்.

தாக்கூர் இடம் மாற்றம் செய்யப்பட்ட நாளன்று உயர்நீதிமன்ற வளாகத்திலும் பத்திரிகையாளர்களிடமும் இதுதான் முதன்மையான டாபிக்காக இருந்தது. அனைவருக்குமே தாக்கூரின் இடமாற்றம் வருத்தம் தரும் வகையில் இருந்தது.
இத்தனைக்கும் பத்திரிகைகள் மீதான வழக்குகளை விசாரித்த பெஞ்சுக்கு தலைமை வகித்தவரே டி.எஸ். தாக்கூர். அந்த பெஞ்சில்தான் முன்னாள் தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து, சபாஹித் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். இருந்தபோதும் பத்திரிகையாளர்கள், தாக்கூரை ரொம்பவே மிஸ் செய்கிறோம் என வேதனைப்பட்டனர்.
மேலும் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் தாக்கூருக்கு பிரிவு உபசார விருந்து அளிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பேச தாக்கூர் மைக் முன் வந்து நிற்கிறார். அந்த அரங்கமே நிசப்தத்தில் மூழ்குகிறது. கர்நாடகாவில் தாம் பணியாற்றிய 10 ஆண்டுகாலத்தைப் பற்றி விவரித்து பேசிக் கொண்டே இருந்தார் தாக்கூர்...
அவர் தமது பேச்சை முடிக்கும் போது கண்ணீர் சிந்தினார். அவரது இந்த உணர்ச்சிப் பெருக்கான நிலையை கண்டு அந்த அரங்கத்தில் கண்ணீர்சிந்தாதவர் எவருமே இல்லை என்கின்றனர் பெங்களூர் பத்திரிகையாளர்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications