ரூ.15 லட்சமும் வரவில்லை.. பதிலும் வரவில்லை.. மோடி ஆபீசை அதிர வைத்த ஒரு ஆர்.டி.ஐ கேள்வி!
டெல்லி: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில், வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டு, ஒவ்வொரு இந்தியர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்று லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது நரேந்திர மோடி கூறியிருந்தார். அந்த பணம் இன்னும் வரவில்லை, ஏன்.. என்று கேட்டு ராஜஸ்தானை சேர்ந்த கன்கையா லால் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்.டி.ஐ) மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த கேள்விக்கு பிரதமர் அலுவலகத்தாலேயே பதில் அளிக்க முடியவில்லை.

மோடி பிரதமராகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ஒவ்வொரு இந்தியருக்கும் ரூ.15 லட்சம் என்ற வாக்குறுதி நீர்த்துப்போயுள்ளது. இந்த நிலையில்தான் கன்கையா லால் இக்கேள்வியை பிரதமர் அலுவலகத்திடம் ஆர்.டி.ஐ மூலம் எழுப்பியுல்ளார்.
இவர், கேள்விகளுக்குப் பதில் அளிக்குமாறு மத்திய தகவல் ஆணையம் பிரதமர் அலுவலகத்துக்குக் கடிதம் அனுப்பியிருந்தது. 7 மாதங்களாகியும் பதில் வந்தபாடில்லையாம்.
எனவே, எனது விண்ணப்பத்துக்குப் பிரதமர் அலுவலகம் பதில் அளிக்கவில்லை என்று, மத்திய தகவல் ஆணையத்துக்குப் புகார் அனுப்பியுள்ளார் கன்கையா லால்.
இதுபற்றி தகவல் ஆணையம் விசாரித்தபோது, கன்கையா லாலின் விண்ணப்பம் எங்களுக்கு வரவில்லை. இதனால், பதிலளிக்க முடியவில்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இப்போது விண்ணப்பத்தின் இன்னொரு பிரதியைத் தகவல் ஆணையம், பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளது.
ஆர்.டி.ஐ விதிப்படி, அந்தத் துறைகளில் ஏற்கெனவே பதிவாகியுள்ள தகவல்களை மட்டுமே தருவார்கள். புதிதாகத் தகவல்களை உருவாக்கித் தர வாய்ப்பு இல்லை. ரூ.15 லட்சம் பற்றி பிரதமர் அலுவலகத்தில் ஏற்கெனவே விவாதிக்கப்பட்டிருந்தால், இதுதொடர்பான தகவல்களைத் தருவார்கள். இல்லை என்றால், தகவல்கள் பிரதமர் அலுவலகத்தில் இல்லை எனக் கூறுவார்கள் என்று கூறப்படுகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா












Click it and Unblock the Notifications