For Daily Alerts
Just In
பண மோசடியில் ஈடுபட்டால் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை: ஆர்.பி.ஐ எச்சரிக்கை
மும்பை: பண மோசடியில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் முண்ட்ரா தெரிவித்தார்.
பண மதிப்பிழப்பு அறிவிப்புக்கு பிறகு வங்கி ஊழியர்கள் முறைகேடுகளில் ஈடுபடு பண முதலைகளுக்கு உடந்தையாக இருப்பது பல்வேறு ஐடி ரெய்டுகள் மூலம் அம்பலமாகியுள்ளது.
இந்தநிலையில் முண்ட்ரா இன்று கூறுகையில், எங்காவது சட்ட விரோதமாக பரிவர்த்தனை நடந்திருப்பது தெரியவந்தால் அங்கெல்லாம் நடவடிக்கை பாய்கிறது. உரிய விசாரணை நடத்தப்படுகிறது.
முறைகேட்டில் ஈடுபட்டதாக பெங்களூரில், ஆர்.பி.ஐ கீழ்மட்ட ஊழியர் ஒருவரை சஸ்பெண்ட் செய்துள்ளோம். பணப்பரிவர்த்தனை ஆவணங்களை வங்கிகள் சர்பார்க்க உத்தரவிட்டுள்ளோம். முறைகேடுகள் அனைத்தும் களையப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Comments
English summary
And whenever any untoward transaction/action is noticed, due investigation would be done: SS Mundra, RBI.
Story first published: Tuesday, December 13, 2016, 17:31 [IST]