என்னதான் ஆட்சிகள் மாறினாலும்... நேர்மையாளர்களை சோதிக்கும் காட்சி மட்டும் மாறவே மாறாது!
சண்டிகர்: சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா நில மோசடி செய்ததாக ஆவணங்கள் மூலம் பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறிய மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அசோக் கெம்கா 45 ஆவது முறையாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
போக்குவரத்து துறை ஆணையர் பதவியிருந்து தகுதி குறைவான தொல்லியல் மற்றும் அருங்காட்சியகங்கள் துறை செயலாளராக கெம்கா மாற்றப்பட்டுள்ளார்.
கெம்காவை அரசுத் தரப்பு பழிவாங்குவது இது முதல் முறையல்ல. அவர் டிரான்ஸ்பர் ஆகாமல் இருந்தால்தான் ஆச்சரியம். அந்த அளவுக்கு ஆட்சியாளர்களுக்கு இவரைக் கண்டாலே பிடிக்காது. காரணம் அதிரடியாக, முகத்தில அடித்தாற் போல செயல்படுபவர் கெம்கா. நேர்மையானவரும் கூட.

போக்குவரத்து ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து அளவுக்கு அதிகமாக பாரங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதித்துள்ளார் கெம்கா.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி கெம்காவை இடமாற்றம் செய்ததுடன், போக்குவரத்து அமைச்சர் ராம் பிலாஸ் ஷர்மாவிடமிருந்து பாரங்களை ஏற்றிச்செல்வதற்கான விதிமுறைகளையும் அடுத்த ஒரு வருடத்திற்கு தளர்த்திவிட்டனர்.
ஹரியானா முதல்வராக கத்தார் பொறுப்பேற்ற போது தான் கெம்கா போக்குவரத்து ஆணையராக நியமிக்கப்பட்டார். கெம்காவை போலவே முதல்வரின் கூடுதல் தனி செயலாளரான சுமிதா மிஸ்ராவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில்தான் கடுமையான சோதனைக்குள்ளாக்கப்பட்டார் கெம்கா என்றால் இப்போது பாஜக ஆட்சியிலும் கூட அவரை அதே போலத்தான் ஆட்சி வட்டம் பார்க்கிறது என்பது வேதனைக்குரியது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications