கங்கையை கொண்டு வந்தது யார்?, இப்பவே தெரிந்தாகணும்: லோக்சபாவில் பாஜக எம்.பி. அடம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கங்கையை யார், எதற்காக கொண்டு வந்தார்கள் என்ற கேள்வி லோக்சபாவில் எழுப்பப்பட்டது.

இன்று லோக்சபாவில் பாஜக எம்.பி. பிரபாத்சிங் பிரதாப்சிங் சவுகான் கேள்வி ஒன்றை எழுப்பி பலரையும் வியக்க வைத்தார். அவர் அவையில் எழுந்து பேசுகையில்,

'Who brought the Ganga?' Query leaves Lok Sabha amused

கங்கையை யார் கொண்டு வந்தார்கள், எதற்காக கொண்டு வந்தார்கள் என்று எனக்கு தெரிந்தாக வேண்டும். கங்கையில் நீராடினால் என்ன ஆகும் என்றும் தெரிய வேண்டும் என்றார்.

இது என்ன, இது ஒரு கேள்வியா என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சவுகானை பார்த்து கேட்டார். இதை கேட்ட அவை உறுப்பினர்கள் பலரும் சிரித்துவிட்டனர். சிலர் என்ன சொல்வது என்று தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

நீர்வளத்துறை அமைச்சர் சன்வர் லால் ஜாட் தனது துறை குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தபோது தான் சவுகான் இந்த வித்தியாசமான கேள்வியை எழுப்பினார்.

சவுகானின் கேள்விக்கு ஜாட் அளித்த பதில்,

கங்கை விவகாரம் வரலாற்று சம்பந்தப்பட்டது. பகிரத் மன்னர் தான் மக்கள் நலன் கருதி கங்கையை கொண்டு வந்தார். கங்கையை சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு கொண்டு வருமாறு சிவனிடம் அவர் தான் கேட்டுக் கொண்டார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+