பட்ஜெட் தாக்கல் செய்கையில் ஜேட்லி ஏன் ராகுல் காந்தி பெயரை குறிப்பிட்டார்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் பிரெய்லி தாள்கள் மீதான இறக்குமதி வரியை நீக்குமாறு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி விடுத்த கோரிக்கையை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஏற்றுக் கொண்டுள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி திங்கட்கிழமை மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். முன்னதாக பட்ஜெட் தொடர்பாக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி ஜேட்லியிடம் கோரிக்கை ஒன்றை முன் வைத்திருந்தார்.

Why Arun Jaitley Mentioned Rahul Gandhi In His Budget Speech

ராகுல் காந்தி பெங்களூரில் உள்ள மவுண்ட் கார்மல் கல்லூரிக்கு வந்திருந்தபோது பார்வயைற்ற மாணவி ஒருவர் அவரை அணுகி பிரெய்லி தாள்களுக்கு இறக்குமதி வரி அதிகம் இருப்பதாகவும், அதற்கு வரிவிலக்கு அளிப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்தார்.

இதையடுத்து ராகுல் இது குறித்து மத்திய வர்த்தகத் துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் பட்ஜெட்டை தாக்கல் செய்கையில் ராகுல் காந்தியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளதாக ஜேட்லி தெரிவித்தார்.

இது குறித்து ராகுல் காந்தி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

பார்வையற்றவர்களுக்கு உதவி செய்ய பிரெய்லி தாள்கள் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற என் கோரிக்கையை ஏற்ற நிதி அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+