சொந்த மக்கள் சாகும்போது.. வெளிநாட்டுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்தது ஏன்? ஜார்கண்ட் அமைச்சர் கேள்வி
ராஞ்சி: சொந்த மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இல்லாத நிலையில், வெளிநாடுகளுக்கு ஏன் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று ஜார்க்கண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சர், குற்றம்சாட்டியுள்ளார்.
கடுமையான தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக, ஜார்கண்ட் அரசு 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது.
இந்த நிலையில், மாநில சுகாதார அமைச்சர் பன்னா குப்தா மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். "மத்திய அரசு எங்களுடன் அரசியல் செய்து கொண்டுள்ளது. ஒரு மத்திய அரசாக, அது கூட்டாட்சி கட்டமைப்பை மதிக்க வேண்டும். மேலும் எங்களுக்கு தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை விரைவாக வழங்குவதற்கு வசதி செய்ய வேண்டும்.

ஜார்கண்ட் நிலவரம்
நாங்கள் 50 லட்சம் அளவுகளுக்கு ஆர்டர் செய்தோம். மே 15 முதல் மே 30க்குள் வழங்கப்படும் என்று மத்திய அரசு சொல்கிறது. கோவிட் -19 இன் இரண்டாவது அலையால் ஜார்கண்ட் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, இதுவரை 3,853 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது, தற்போது 58,806 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன.

வெளிநாடுகள்
சொந்த நாட்டு மக்கள் இறக்கும் போது வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை அனுப்புவதற்கு என்ன அவசியம்?
தேர்தலுக்கு முன்னதாக, மேற்கு வங்கம் மற்றும் பீகார் மக்களுக்கு இலவசமாக கோவிட் -19 தடுப்பூசிகளை வழங்குவதாக பாஜக உறுதியளித்திருந்தது.

மக்களை சித்திரவதை செய்ய கூடாது
நீங்கள் எங்களுடன் ஏன் அரசியல் செய்கிறீர்கள்? எங்களுக்கு தடுப்பூசிகளை வழங்குங்கள். நாங்கள் அதை வாங்க தயாராக இருக்கிறோம். நீங்கள் எங்கள் மக்களை சித்திரவதை செய்கிறீர்கள், அவர்களை அவமதிக்கிறீர்கள். உயிர்காக்கும் மருந்துகளை வழங்குவதில் கூட பாரபட்ச அணுகுமுறையை உள்ளது.

ரெடியாக இருக்கிறோம்
18-44 வயதினருக்கான தடுப்பூசி இயக்கத்தைத் தொடங்க நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம். இன்று நீங்கள் எங்களுக்கு தடுப்பூசிகளைக் கொடுத்தால் கூட, நாளை முதல் இயக்கத்தைத் தொடங்குவோம். ஒரு நாளைக்கு சுமார் 4.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வானொலி உரை
கடந்த வியாழக்கிழமை, கொரோனா நிலைமை குறித்து ஜார்கண்ட், ஒடிசா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதலமைச்சர்களிடம் மோடி பேசினார். இதையடுத்து, நள்ளிரவில் பிரதமருடனான தொலைபேசி உரையாடல் குறித்து ஹேமந்த் சோரன் ட்வீட் செய்தார். "பிரதமர் இன்று போனில் அழைத்தார், அவர் 'மான் கி பாத்' மாதிரி பேசினார். எதிர் தரப்பிடம் கருத்தே கேட்கவில்லை" என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications