தேர்தல் முடிவுகளே வரல.. அதற்குள் இப்படியா.. ஜார்க்கண்ட் காங்கிரஸ் கூட்டணியில் வெடித்த குழப்பம்?
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த முறை அங்கு இரு தரப்பும் தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டது. அதேநேரம் காங்கிரஸ் தலைவர்கள் பெரியளவில் இது பிரச்சாரம் செய்யவில்லை என்றும் ஜேஎம்எம் தனித்துவிடப்பட்டதாகவும் முணுமுணுப்புக்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தி ஹார்ட்லேண்ட் மாநிலங்களில் ஒன்றான ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சீட்கள் உள்ளன. அங்கு 41 கட்சிகளில் வெல்லும் கட்சி அல்லது கூட்டணியே ஆட்சியை அமைக்கவுள்ளது.

ஜார்க்கண்ட் தேர்தல்: ஜார்க்ண்டில் இப்போது ஜேஎம்எம்- காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி உள்ளது. மறுபுறம் எதிர்க்கட்சி வரிசையில் பாஜக உள்ளது. இரு தரப்புமே வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியுள்ளது. இதற்காக அவர்கள் மாநிலம் முழுக்க கடந்த சில மாதங்களாகவே பிரச்சாரங்களை மேற்கொண்டனர். அதேநேரம் இரு தரப்பு பிரச்சாரத்தில் நம்மால் ஒரு வேறுபாட்டைப் பார்க்க முடிந்தது.
அதாவது, ர்க்கண்டில் மாநிலத்தில் பாஜக சார்பில் நடந்த பல்வேறு பிரச்சார கூட்டங்களில் பிரதமர் மோடியும் அமித் ஷாவும் கலந்து கொண்டனர். ஆனால், ஆளும் ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணியில் இதேதான் நிலைமை என்று நம்மால் சொல்ல முடியாது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தலா 6 பிரச்சார கூட்டங்களில் மட்டுமே கலந்து கொண்டு இருந்தனர். அவை அனைத்துமே காங்கிரஸ் வேட்பாளர்கள் பங்கேற்கும் தொகுதிகளில் நடந்தவை ஆகும். அவர்கள் ஜேஎம்எம் உட்பட எந்தவொரு கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் பிரச்சாரம் செய்யவில்லை. இதனால் ஹேமந்த் சோரன் தரப்பு அதிருப்தி அடைந்ததாகச் சொல்லப்படுகிறது.
காங்கிரஸ் விளக்கம்: மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தல் மற்றும் வயநாடு உள்ளிட்ட இடைத்தேர்தல் பணிகளைக் கவனிக்க வேண்டி இருந்ததாலேயே மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி ஜார்க்கண்டில் அதிகளவில் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என்கிறார்கள். அதேநேரம் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஜார்க்கண்டில் தேவையான கட்சி பணிகளைக் கவனித்ததாகத் தெரிவித்தனர். காங்கிரஸ் மட்டுமின்றி கூட்டணிக் கட்சி வேட்பாளர்களின் வெற்றியும் தங்களுக்கு முக்கியம் என்றும் தொண்டர்கள் அந்த பணிகளை மேற்கொண்டதாகத் தெரிவிக்கிறார்கள்.
அதிருப்தி: இது என்னதான் ஹேமந்த் சோரன் தரப்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தினாலும் அதைப் பொதுவெளியில் காட்டிக் கொள்ளவில்லை. ஹேமந்த் சோரனும் சரி, அவரது மனைவி கல்பனா சோரனும் சரி மாநிலம் முழுக்க தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். இருவரும் 90க்கும் மேற்பட்ட பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவும் ஜார்க்கண்டில் பிரச்சாரம் செய்து இருந்தார்.
இதனால் காங்கிரஸ் தலைவர்கள் பெரியளவில் பிரச்சாரம் செய்யவில்லை என்றாலும் கூட அது தங்கள் வெற்றியைப் பாதிக்காது என்றே ஜேஎம்எம் தலைவர்கள் சொல்கிறார்கள்.. எது எப்படி இருந்தாலும் ஜார்க்ண்ட் மக்கள் யாருக்கு ஆதரவளித்துள்ளனர்.. எந்தக் கட்சி அல்லது கூட்டணி அங்கு ஆட்சியை அமைக்கப் போகிறது என்பது இன்னும் 3 நாட்களில் தெரிந்துவிடும்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 91 சீட்கள் உள்ள நிலையில், அங்கு அதிகபட்சமாக 41 சீட்களில் ஜேஎம்எம் கட்சி போட்டியிடுகிறது. மறுபுறம் காங்கிரஸ் 30 தொகுதிகளில் களமிறங்குகிறது. கூட்டணியில் உள்ள ஆர்ஜேடி 6 தொகுதிகளிலும், இடதுசாரிகள் நான்கு தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
பாஜக கூட்டணியில் பாஜக அதிகபட்சமாக 68 சீட்களில் போட்டியிடுகிறது. அந்த கூட்டணியில் உள்ள ஏஜேஎஸ்யு கட்சி 10 இடங்களில் போட்டியிடும் நிலையில், ஜேடியு 2 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) நான்கு தொகுதிகளில் போட்டியிடுகிறது.
-
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications