அது ஏன் கெஜ்ரிவாலை எல்லாரும் கழுத்திலேயே அடிக்கிறாங்க, குத்துறாங்க?
டெல்லி: ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவாலுக்கு இதுவரை மூன்று முறை கழுத்தில் அடி விழுந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு இடங்களில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் அவருக்கு குத்து, அறை விழுந்துள்ளது.

வாரனாசி
பாஜக பிரதமர் வேட்பாளரான மோடி போட்டியிடும் வாரனாசியில் கெஜ்ரிவால் திறந்த ஜீப்பில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் மீது கருப்பு மை வீசப்பட்டது.

ஹரியானா
கெஜ்ரிவால் ஹரியானா மாநிலத்தில் உள்ள சக்ரி தாத்ரி பகுதியில் திறந்த வாகனத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது திடீர் என்று ஒருவர் கெஜ்ரிவாலை கழுத்தில் தாக்கிவிட்டார். உடனே ஆம் ஆத்மி கட்சியினர் அந்த நபரை பிடித்து அடித்து உதைத்தனர்.

டெல்லி
தெற்கு டெல்லியில் உள்ள தக்ஷின்புரி பகுதியில் கெஜ்ரிவால் திறந்த ஜீப்பில் இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது அடையாளம் தெரியாத ஒருவர் கெஜ்ரிவாலின் கழுத்தில் இரண்டு குத்துவிட்டதுடன் அறையவும் செய்தார். இதை பார்த்து கோபம் அடைந்த ஆம் ஆத்மி கட்சியினர் அந்த நபரை பிடித்து நையப் புடைத்தனர்.

ஆம் ஆத்மி
தன்னை யார் தாக்கினாலும் அவர்கள் மீது வன்முறையை பிரயோகப்படுத்தக் கூடாது என்று கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியினரை கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications