சாலையோரம் ப்ரிட்ஜ் வைத்த கேரளத்து பெண்: யாருக்காக?
கொச்சி: கேரளாவை சேர்ந்த உணவக உரிமையாளரான பெண் ஒருவர் பசியால் வாடுவோரின் நலனை கருதி சாலையோரம் குளிர்சாதன பெட்டியை வைத்துள்ளது பற்றி பலரும் ஃபேஸ்புக்கில் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் மினு பாலின். அவர் கொச்சியில் பப்படவடா என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறார். ஒரு நாள் அவர் தனது உணவகத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது உணவகத்தின் அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் உணவு எதுவும் கிடைக்காதா என்ற ஏக்கத்தில் சிலர் குப்பையை கிளறியதை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.

பசியால் வாடுவோருக்கு தம்மால் முடிந்த உதவியை செய்ய தீர்மானித்தார். இதையடுத்து அவர் 420 லிட்டர் குளிர்சாதன பெட்டி ஒன்றை தனது உணவகத்திற்கு வெளியே சாலையோரம் வைத்தார்.
பசியால் வாடுவோருக்கு உணவளிக்க விரும்பும் யார் வேண்டுமானாலும் இந்த குளிர்சாதன பெட்டியில் உணவை வைக்கலாம். அதை தேவைப்படுவோர் எடுத்து சாப்பிடலாம். இந்த குளிர்சாதன பெட்டிக்கு பாலின் நன்மை மரம் என பெயர் வைத்துள்ளார்.
பசியால் வாடும் மக்களுக்கு உதவும் வகையில் குளிர்சாதன பெட்டியை சாலையோரம் வைத்த பாலினை பலரும் ஃபேஸ்புக்கில் பாராட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications