சென்னை உள்ளிட்ட தென்னிந்திய நகரங்களை தீவிரவாதிகள் இலக்கு வைப்பது ஏன்?
டெல்லி: சென்னை உள்ளிட்ட தென்னிந்திய நகரங்களை இலக்கு வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டி வருவது உளவுத்துறைக்கு தொடர்ந்தும் சவாலாக இருந்து வருகிறது.
தென்னிந்தியாவை இலக்கு வைத்து தீவிரவாதிகள் நடத்த திட்டமிட்ட சதி செயல்கள் பலவும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மும்பை தாக்குதலைத் தொடர்ந்து சென்னையிலும் அதுபோல ஒரு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது.

இலங்கை தீவிரவாதிகள்...
இலங்கையில் உள்ள தீவிரவாதிகளை பயன்படுத்தி பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. இத்தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் இது முறியடிக்கப்பட்டது.

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில்..
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா மட்டுமல்ல.. ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கமும் கூட தென்னிந்தியாவைத்தான் குறி வைத்துக் கொண்டிருக்கிறது. ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்த 23 இந்தியர்களில் 4 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தவர். எஞ்சிய 19 பேரும் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள்.

ஹாஜாவும் ரூட்டுகளும்
ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு தென்னிந்தியாவில் இருந்து ஆட்களை சேர்த்துவிடுவதில் முக்கிய பங்கு வகித்தது ஹாஜா பக்ருதீன். இந்த பக்ருதீன் தான் தென்னிந்திய இளைஞர்களை ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் சேர்த்துவிடுவதற்கான காரணமாக இருந்தவர். சிங்கப்பூரில் வேலை செய்வதற்கான ஒர்க் பெர்மிட்டை வாங்கிக் கொடுத்து அங்கிருந்து ஈராக் அல்லது சிரியாவுக்கு இளைஞர்களை அனுப்பி வந்ததார் பக்ருதீன். ஆனால் போலீசார் இதை மோப்பம் பிடித்து ஒழித்துக் கட்டினர். இதன்பின்னர் தென்னிந்தியாவில் இருந்து மேற்கு வங்கத்துக்கு ரயில் மூலம் சென்று அங்கிருந்து சட்டவிரோதமாக வங்கதேசத்துக்கு ஊடுருவி பின்னர் ஈராக் அல்லது சிரியா செல்வதற்கான மற்றொரு ரூட்டும் உருவாக்கப்பட்டது.

வளைகுடா தாக்கம்..
கேரளா, தமிழகத்துக்கும் வளைகுடா நாடுகளுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதும் இம்மாநில இளைஞர்கள் தீவிரவாத இயக்கத்தை நோக்கி செல்வதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. இதேபோல் கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களும் தீவிரவாத இயக்கங்களில் இணைவதில் ஆர்வம் காட்டியிருக்கின்றனர்.
பொதுவாக தென்னிந்திய இளைஞர்கள் அதிகளவு பயங்கரவாத செயல்களால் பாதிக்கப்படாதவர்களாக இருக்கின்றனர். அதனால் அவர்கள் எளிதாக இத்தகைய தீவிரவாத இயக்கங்களை நாடுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களைப் பயன்படுத்தியே தென்னிந்தியாவில் நாசவேலைகளை நடத்தவும் தீவிரவாதிகள் திட்டமிட்டு வருகின்றனர். இருப்பினும் உளவுத்துறை அனைத்து சதிகளையும் வெற்றிகரமாகவே முறியடித்துவருகிறது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications