மக்களவையில் ஏன் எதிர்க்கட்சி தலைவர் இல்லை? மத்திய அரசிடம் விளக்கம் கேட்கிறது உச்சநீதிமன்றம்
டெல்லி: எதிர்க்கட்சி தலைவர் நியமனத்தில் விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் எதிர்க்கட்சி பதவிக்கு தேவையான 55 எம்.பி.க்கள் எண்ணிக்கையை பெறவில்லை. அதே நேரம் தனிப்பட்ட பெரிய கட்சியாக 44 எம்.பிக்களை வைத்துள்ளது.

இதுகுறித்து சட்ட ஆலோசனை நடத்திய மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கடந்த சில தினங்களுக்கு முன் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி பதவி வழங்க முடியாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்நிலையில், லோக்பால் குழுவுக்கு உறுப்பினர்களை நியமனம் செய்ய அரசு காலதாமதம் காட்டிவருவதாக குற்றம்சாட்டி வக்கீல் பிரசாந்த் பூசன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தலைமை நீதிபதி லோதா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
"லோக்பால் குழுவின் முக்கிய உறுப்பினர் எதிர்க்கட்சி தலைவர். லோக்பால் நியமனத்திற்கான குழுவில் எதிர்கட்சி தலைவர் இடம் பெற வேண்டும் .
சில முக்கிய நியமனத்திற்கும் எதிர்கட்சி தலைவர் பங்களிப்பு கட்டாயமாக உள்ளது. எனவே எதிர்கட்சி தலைவர் என்ற வார்த்தைக்கு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும்" என்று நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளதுடன், அந்த நோட்டிசுக்கான விளக்கத்தை நான்கு வாரத்திற்குள் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் கோரியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கை மத்திய அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
-
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் கோவை மூத்த பெண் வழக்கறிஞர் மோகனா! யார் இவர்? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications