தேர்தல் தோல்வி- முதல்வர்கள் ராசி அப்படியாம்-உத்தரகாண்ட் பா.ஜ.க. முதல்வர் தீரத்சிங் ராஜினாமா பின்னணி
: உத்தரகாண்ட் மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் நிலையில் முதல்வர் தீரத்சிங் ராவத் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இடைத்தேர்தலில் போட்டியிட்டால் தோல்வி அடைந்துவிடுவோம் என்பதாலேயே தீரத்சிங் ராவத் பதவியை ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக இருந்த திரேந்திரசிங் ராவத் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டது. இதனால் சில மாதங்களுக்கு முன்னர் திரேந்திரசிங் மாற்றப்பட்டு புதிய முதல்வராக தீரத்சிங் ராவத் பதவியேற்றார்.
பவுரி லோக்சபா தொகுதி எம்.பி.யாக இருந்த நிலையிலேயே தீரத்சிங் முதல்வராக்கப்பட்டார். மாநில முதல்வரான தீரத்சிங் 6 மாதங்களுக்குள் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தற்போதைய நிலையில் கங்கோத்ரி, ஹால்த் வானி சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன.

தோற்ற முதல்வர்கள்
இவற்றில் கங்கோத்ரி தொகுதியில் தீரத்சிங் போட்டியிடலாம் என கூறப்பட்டு வந்தது. ஆனால் உத்தரகாண்ட் மாநிலத்தில் தேர்தல்களை சந்திக்கும் முதல்வர்களுக்கு ஒரு ராசி இருக்கிறதாம். 2012-ல் முதல்வராக இருந்த பாஜகவின் பி.சி. கந்தூரி, கோட்வார் தொகுதியில் தோற்கடிக்கப்பட்டார். 2017-ல் காங்கிரஸ் முதல்வராக இருந்த ஹரீஷ் ராவத், தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார்.

டெல்லியில் ஆலோசனை
அதேபோல் தாமும் தேர்தலில் போட்டியிட்டால் தோல்வியைத் தழுவுவோம் என கருதினாராம் தீரத்சிங். இதனையடுத்தே பதவி விலகுவது தொடர்பாக டெல்லிக்கு சென்று ஆலோசனை நடத்தி இருக்கிறார். பாஜகவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரிடம் தமது முடிவில் உறுதியாக இருப்பதாகவும் தீரத்சிங் தெரிவித்தார்.

திடீர் ராஜினாமா
இதனையடுத்து நேற்று நள்ளிரவில் ஆளுநரை சந்தித்து தமது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தாராம் தீரத்சிங். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் எஞ்சிய காலத்தில் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட சீனியர் பாஜக தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர். மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், சத்பால் மகாராஜ், தன்சிங் ராவத், பாஜக ராஜ்யசபா எம்.பி. அனில் பலூனி ஆகியோர் முதல்வர் பதவிக்கான ரேஸில் உள்ளனர். 4 மாதங்களில் 3-வது முதல்வர் என்கிற வரலாறு படைக்கிறது உத்தரகாண்ட் பாஜக.

பாஜக மீது அதிருப்தி
அதேநேரத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. அரசு மீது மக்களிடத்தில் கடும் அதிருப்தி இருக்கிறது. குறிப்பாக கொரோனா பிரச்சனையை உத்தரகாண்ட் அரசு கையாண்டவிதம் கடுமையாக விமர்சனங்களுக்குள்ளாகி இருக்கிறது. இதனால் சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியைத் தழுவத்தான் போகிறது. இதனை சரி செய்யும் நடவடிக்கையாகவே தீரத்சிங் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார் என்கின்றனர் அம்மாநில சீனியர் பத்திரிகையாளர்கள்.
-
அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து?












Click it and Unblock the Notifications