தேர்தல் தோல்வி- முதல்வர்கள் ராசி அப்படியாம்-உத்தரகாண்ட் பா.ஜ.க. முதல்வர் தீரத்சிங் ராஜினாமா பின்னணி
: உத்தரகாண்ட் மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் நிலையில் முதல்வர் தீரத்சிங் ராவத் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இடைத்தேர்தலில் போட்டியிட்டால் தோல்வி அடைந்துவிடுவோம் என்பதாலேயே தீரத்சிங் ராவத் பதவியை ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக இருந்த திரேந்திரசிங் ராவத் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டது. இதனால் சில மாதங்களுக்கு முன்னர் திரேந்திரசிங் மாற்றப்பட்டு புதிய முதல்வராக தீரத்சிங் ராவத் பதவியேற்றார்.
பவுரி லோக்சபா தொகுதி எம்.பி.யாக இருந்த நிலையிலேயே தீரத்சிங் முதல்வராக்கப்பட்டார். மாநில முதல்வரான தீரத்சிங் 6 மாதங்களுக்குள் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தற்போதைய நிலையில் கங்கோத்ரி, ஹால்த் வானி சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன.

தோற்ற முதல்வர்கள்
இவற்றில் கங்கோத்ரி தொகுதியில் தீரத்சிங் போட்டியிடலாம் என கூறப்பட்டு வந்தது. ஆனால் உத்தரகாண்ட் மாநிலத்தில் தேர்தல்களை சந்திக்கும் முதல்வர்களுக்கு ஒரு ராசி இருக்கிறதாம். 2012-ல் முதல்வராக இருந்த பாஜகவின் பி.சி. கந்தூரி, கோட்வார் தொகுதியில் தோற்கடிக்கப்பட்டார். 2017-ல் காங்கிரஸ் முதல்வராக இருந்த ஹரீஷ் ராவத், தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார்.

டெல்லியில் ஆலோசனை
அதேபோல் தாமும் தேர்தலில் போட்டியிட்டால் தோல்வியைத் தழுவுவோம் என கருதினாராம் தீரத்சிங். இதனையடுத்தே பதவி விலகுவது தொடர்பாக டெல்லிக்கு சென்று ஆலோசனை நடத்தி இருக்கிறார். பாஜகவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரிடம் தமது முடிவில் உறுதியாக இருப்பதாகவும் தீரத்சிங் தெரிவித்தார்.

திடீர் ராஜினாமா
இதனையடுத்து நேற்று நள்ளிரவில் ஆளுநரை சந்தித்து தமது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தாராம் தீரத்சிங். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் எஞ்சிய காலத்தில் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட சீனியர் பாஜக தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர். மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், சத்பால் மகாராஜ், தன்சிங் ராவத், பாஜக ராஜ்யசபா எம்.பி. அனில் பலூனி ஆகியோர் முதல்வர் பதவிக்கான ரேஸில் உள்ளனர். 4 மாதங்களில் 3-வது முதல்வர் என்கிற வரலாறு படைக்கிறது உத்தரகாண்ட் பாஜக.

பாஜக மீது அதிருப்தி
அதேநேரத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. அரசு மீது மக்களிடத்தில் கடும் அதிருப்தி இருக்கிறது. குறிப்பாக கொரோனா பிரச்சனையை உத்தரகாண்ட் அரசு கையாண்டவிதம் கடுமையாக விமர்சனங்களுக்குள்ளாகி இருக்கிறது. இதனால் சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியைத் தழுவத்தான் போகிறது. இதனை சரி செய்யும் நடவடிக்கையாகவே தீரத்சிங் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார் என்கின்றனர் அம்மாநில சீனியர் பத்திரிகையாளர்கள்.
-
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங் -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம்












Click it and Unblock the Notifications