தடையை உடைத்த பிருந்தாவன் விதவைகள்... உற்சாக தீபாவளி கொண்டாட்டம்!
பிருந்தாவன ஆசிரமத்தில் உள்ள விதவைகள் முதன்முறையாக உற்சாகத்துடன் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தனர்.
பிருந்தாவன்: உத்தரபிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள ஆசிரமத்தில் முதன் முறையாக அங்குள்ள விதவைகள் தீபாவளி கொண்டாடினர். தீபங்களை ஏற்றி வழிபட்ட அவர்கள், நடனமாடியும், உற்சாகமாக பண்டிகையை கொண்டாடினர்.
பிருந்தாவன் நகரத்தில் உள்ள ஆறுக்கும் மேற்பட்ட ஆசிரமங்களில், ஏராளமான விதவைப் பெண்கள் தங்கி உள்ளனர். இவர்களில், பெரும்பாலானவர்கள், கணவர் இறந்ததும் குடூம்பத்தினரால் கைவிடப்பட்டவர்கள். சமூகத்தினரால் புறக்கணிக்கப்பட்டுள்ள, இந்த விதவைகளின் நிலையை மேம்படுத்த பாடுபட்டு வரும், 'சுலாப் இன்டர் நேஷனல்' என்ற அமைப்பு, கடந்த காலங்களில், இந்த விதவைகளை, ரக்ஷா பந்தன், ஹோலி பண்டிகை கொண்டாட்டங் களில் பங்கேற்க வைத்தது. இவர்களுக்காக, சிறப்பு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்தது.

நாடுமுழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டதை முன்னிட்டு பிருந்தாவன் விதவைகளுக்காக, சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 700க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வியாழக்கிழமையன்று பிருந்தாவனில் உள்ள பழமை வாய்ந்த கோபிநாத் ஆலயத்தில் தீபாவளி கொண்டாட்டங்கள் களை கட்டின.
தீபங்களை ஏற்றி இறைவனை வழிபட்ட அவர்கள், நடனமாடியும், பலவித போட்டிகளிலும் உற்சாகமாக பங்கேற்றனர். கணவருடன் கடைசி தீபாவளி கொண்டாடியதாக கூறிய அந்த பெண்கள், நீண்ட நாட்களுக்குப் பின்னர் இப்போதுதான் மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாடியதாக தெரிவித்தனர். சொந்தங்களால் கைவிடப்பட்டு சோகமே வடிவாக இருந்த இந்த பெண்கள் தீபாவளி கொண்டாடியது காண்பர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications