ஆண்மையில்லாதவன் என்று குத்திக்காட்டியே கணவரை ஐஎஸ் தீவிரவாதியாக்கிய பெண்
அகமதாபாத்: நீ ஆண்மை இல்லாதவன், கொடுத்த வேலையை செய்ய முடியாதவன் என்று மனைவி கூறியதால் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி கடுப்பாகி தாக்குதல் நடத்த கிளம்பியது தெரிய வந்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் வழிபாட்டு இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்த வாசீம் மற்றும் அவரது சகோதரர் நயீம் ஆகியோரை அம்மாநில தீவிரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் விசாரணையில் வாசீம் கூறியிருப்பதாவது,
நான் ஆண்மை இல்லாதவன் என்றும், கொடுத்த வேலையை செய்ய லாயக்கு இல்லாதவன் என்றும் என் மனைவி சொல்லிக் கொண்டே இருந்தாள். அதனால் தான் கடுப்பாகி என் சகோதரர் நயீமுடன் சேர்ந்து எங்களுக்கு அளிக்கப்பட்ட தாக்குதல் வேலையை செய்ய முடிவு செய்தேன்.
சோடிலா பகுதியில் தாக்குதல் நடத்த சென்றோம். ஆனால் கடைசி நேரத்தில் பயமாக இருந்தது. அடுத்து பாவ்நகர் பகுதியில் வாகனங்களுக்கு தீ வைக்க முடிவு செய்தோம். அதற்கும் பயமாக இருந்தது. அதனால் எதுவும் செய்யவில்லை.
நானும், என் சகோதரரும் பிக் கேட் மற்றும் ஒன்கோல்ஒன்எயிம் என்ற பெயரை பயன்படுத்தினோம். தாக்குதல் நடத்த உத்தரவிட்டவர் கடக்313 என்ற பெயரில் பேசினார் என்றார்.
இந்நிலையில் வாசீமின் மனைவிக்கு எதிராக ஆதாரங்கள் கிடைத்தவுடன் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீவிரவாத தடுப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications