பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்தால் மோடி ஆதரவாளராக மாறிவிடுகிறேன்: முதல்வர் ஜிதன்ராம் மஞ்சி
பாட்னா: பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்தால் பிரதமர் மோடியின் ஆதரவாளராக மாறிவிடுகிறேன் என்று அம்மாநில முதல்வர் ஜிதன்ராம் மஞ்சி கூறியுள்ளார்.
இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் ஜிதன்ராம் மஞ்சி பேசியதாவது:
பீகார் மாநிலத்தில் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு விட்டதைப்போல் மத்திய மந்திரிகள் உரத்த குரலில் பேசி வருகிறார்கள். ஆனால் உண்மை நிலை அப்படி இல்லை.

பீகாரில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சிறப்பு கவனம் தேவைப்படுகிறது. மத்திய அமைச்சரவையில் இருக்கும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்களின் சொந்த மாநில தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் செயல்பட வேண்டும்.
பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிப்பு பணிகளுக்கு மாநில அரசு செலவழித்துள்ள ரூ.1,000 கோடியை திரும்ப தருவது போன்ற எங்களின் கோரிக்கைகளை நரேந்திர மோடி நிறைவேற்றினால் நான் அவரை ஆதரிக்கவும், அவரின் ஆதரவாளராக மாறவும் தயார்.
இவ்வாறு ஜிதன்ராம் மஞ்சி பேசினார்.












Click it and Unblock the Notifications