ஒரு தொகுதி கூட கிடைக்காது..சட்டமன்றத்தில் சவால் விட்ட ஜெகன்! குப்பத்தில் கொடி நாட்டுவாரா சந்திரபாபு?
அமராவதி : ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் சட்டப்பேரவையில் சவால் விட்டது போல சந்திரபாபு நாயுடு ஜெயிப்பாரா? அல்லது ஒரு இடம் கூட கிடைக்காமல் உங்கள் கட்சியை தோற்கடிக்க செய்வேன் என்ற ஜெகன்மோகன் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை மூன்று கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து இருக்கிறது. ஜூன் ஒன்றாம் தேதி கடைசி கட்ட தேர்தலும் ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

நாளை மறுநாள் ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக 11ஆம் தேதி மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவடைகிறது. ஆந்திர மாநிலத்தில் மக்களவைத் தேர்தலோடு சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறுகிறது.
ஆட்சியை தொடர வேண்டும் என்ற முனைப்பில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன்மோகன் ரெட்டி அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார். அவருக்கு ஆதரவாக அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பலரும் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்து வருகின்றனர். தற்போதைய சூழல் படி யார் ஜெயிப்பார்கள் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்பதை கணிக்க முடியாமலேயே இருக்கிறது. அந்த அளவுக்கு ஆந்திர அரசியல் இருக்க காரணம் சாதி செல்வாக்கு தான் சாதி அங்கு ஆட்சியை தீர்மானிக்கும் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது.
அது மட்டும் இல்லாமல் ஒரு காலத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த காங்கிரஸ், ஜெகன்மோகன் வருகைக்கு பிறகு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இப்போது ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்எஸ் சர்மிளா அவருக்கு எதிராகவே தேர்தலில் களமிறங்கி இருக்கும் நிலையில் போட்டி சூடு பிடித்திருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க சந்திரபாபு நாயுடு ஜனசேனா மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்.
அதே நேரத்தில் சந்திரபாபு நாயுடுவின் கோட்டையை எப்படியாவது தகர்த்து விட வேண்டுமென தற்போதைய முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டி கடுமையாக முயற்சித்து இருக்கிறார். ஆந்திரா மாநிலத்தை பொருத்தவரை குப்பம் சட்டமன்ற தொகுதி தமிழக எல்லையை ஒட்டி இருக்கிறது. இந்த தொகுதி தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதியாகவும் உள்ளது. அதன் காரணமாக வெற்றி வாய்ப்புக்கு இங்கு தமிழர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
சுமார் 2.5 லட்சம் வாக்காளர்கள் இருக்கும் நிலையில் 1955ஆம் ஆண்டு இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டது. 1983லிருந்து என்டி ராமராவ் தொடங்கிய தெலுங்கு தேசம் கட்சியே இந்த தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. 1989 முதல் 2019ஆம் ஆண்டு வரை சந்திரபாபு நாயுடு அங்கு தொடர்ச்சியாக ஏழு முறை வெற்றி பெற்றிருக்கிறார். இந்த நிலையில் தற்போதைய தேர்தலில் குப்பம் தொகுதியில் சந்திரபாபு நாயுடு மீண்டும் போட்டுகிற நிலையில் அவரை தோற்கடிக்க ஜெகன்மோகன் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறார்.
ஆப்ரேஷன் குப்பம் என்ற திட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்ட நிலையில் தற்போது அங்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் பரத் போட்டிருக்கிறார். அவர் அந்த கட்சியின் சீனியரான சந்திர மௌலியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. குப்பம் தொகுதிக்கு ஏற்கனவே பொறுப்பு அமைச்சராக பெத்தரெட்டி ராமச்சந்திர ரெட்டி நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவர் தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகளை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைய வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அங்கு நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் 80 சதவீத இடங்களை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை கைப்பற்றியிருக்கிறது. மேலும் தெலுங்கு தேசம் கட்சியின் எஃகு கோட்டையாக இருந்த குப்பம் நகராட்சியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கொடி தற்போது பறந்து வருகிறது. இவ்வளவு போட்டி ஏற்பட காரணம் சட்டசபை கூட்டத்தில் ஜெகன்மோகனுக்கும் சந்திரபாபுவிற்கும் ஏற்பட்ட நேரடி மோதல் தான்.
சட்டப்பேரவையில் ஜெகன்மோகன் பேசிய போது அடுத்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது. உங்கள் கட்சியை தோற்கடிக்க செய்வேன் என சவால் விட்டார். அதற்கு எதிர் சவால் விடுத்த சந்திரபாபு நாயுடு அடுத்தமுறை முதல்வராக மட்டுமே சட்டப்பேரவைக்குள் நுழைவேன் என கூறிவிட்டு வெளியேறினார். அதன் பிறகு நடந்த சட்டசபை கூட்டத்தில் அவர் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாகத்தான் குப்பம் தொகுதியில் தீவிர கவனத்தை செலுத்தி வருகிறார் ஜெகன்மோகன். தற்போது அங்கு தெலுங்கு தேசத்திற்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் கடும் போட்டி நிலவுகிறது சந்திரபாபு நாயுடுவிற்கு அவரது மனைவி புவனேஸ்வரி மகன் லோகேஷ் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் குப்பம் தொகுதியில் வெற்றி பெற்று ஆந்திராவில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பேன் என சந்திரபாபு நாயுடு கூறி வருகிறார். இதன் காரணமாக ஆந்திரா அரசியலில் குப்பம் தொகுதி முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications