காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றத்தை முடக்குவோம் - தம்பிதுரை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றத்தை முடக்குவோம் என்று அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துளளார்.
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை. எனவே மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றத்தை முடக்குவோம் என்று அதிமுக எம்பி தம்பிதுரை கூறியுள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு படி காவிரி நீரை கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் பங்கிட்டு கொள்வதை கண்காணிப்பதற்காக காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 16ம் தேதி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. சுமார் 4 வார காலம் முடிவடைந்த நிலையில் 29ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்.

தமிழக அரசும், அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஆனால் மத்திய அரசு இதுபற்றி அக்கறை காட்டாமல் ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று கூறி வருகிறது இந்நிலையில் காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்ற பட்ஜெட் 2வது கூட்டத் தொடர் தொடங்கியது முதல் அதிமுக எம்பிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து 10 நாட்களாக நாடாளுமன்றத்திலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி எம்பிகள் முழக்கமிட்டு வருகின்றனர். இந்நிலையில்
டெல்லியில் அதிமுக எம்பிகளின் ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு லோக்சபா துணை சபாநாயகரும் அதிமுக எம்பியுமான தம்பிதுரை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றத்தை முடக்குவோம் என்றார். தமிழக அரசு மற்றும் எம்பிகளின் கோரிக்கைக்கு மத்திய அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை என்று தம்பிதுரை குற்றச்சாட்டினார்.












Click it and Unblock the Notifications