என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகத் தயார்: உம்மன் சாண்டி
திருவனந்தபுரம்: சோலார் பேனல் மோசடி வழக்கில் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகத் தயார் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.
சோலார் பேனல் மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளியான தொழில் அதிபர் சரிதா நாயர் கேரள முதல்வர் உம்மன் சாண்டி மீது பல புகார்கள் தெரிவித்து வருகிறார். அதை நிரூபிக்க தன்னிடம் போதிய ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சரிதா நாயரின் குற்றச்சாட்டுகளை சாண்டி ஏற்கனவே மறுத்துள்ளார். இந்நிலையில் இது குறித்து அவர் கூறுகையில்,

அரசியல்
சோலார் பேனல் மோசடி வழக்கில் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. அந்த குற்றச்சாட்டுகளில் ஒரு சதவீதம் அளவுக்கு கூட உண்மை இருந்தால் நான் அரசியலில் இருந்து விலகத் தயார்.

மக்கள்
நான் எந்த தவறும் செய்யவில்லை. என் மனசாட்சி சுத்தமானது. மக்களுக்கு எல்லாம் புரிகிறது. மீடியாக்களுக்கு தான் கடைசியில் புரிகிறது. இது போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கேரள மக்கள் நம்ப மாட்டார்கள் என்று தெரிந்து தான் இடதுசாரி கட்சிகள் பதட்டமாக உள்ளன.

இடதுசாரிகள்
இந்த குற்றச்சாட்டுகள் உண்மை என்று அவர்கள் நினைத்தால் சட்டசபை தேர்தல் வரைக்கும் காத்திருக்க வேண்டியது தானே? அவர்கள் பயப்படுகிறார்கள்.

சரிதா நாயர்
கடந்த 2014ம் ஆண்டு ஒரு முன்னணி பத்திரிக்கையில் சரிதா நாயரின் பேட்டி வெளியானது. அதில் முதல்வருக்கு எதிராக பேச சரிதாவுக்கு சிபிஎம் ரூ.10 கோடி அளித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. அவதூறை பரப்புவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.
-
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
ஶ்ரீபெரும்புதூரை குறிவைத்த விசிக.. தொகுதி மாறும் செல்வப்பெருந்தகை.. எங்கு தெரியுமா -
சங்கித் தனத்தை காட்டிய ரஜினி.. இதுக்கா முட்டுக் கொடுத்தோம்? பொளக்கும் நெட்டிசன்கள்! வெளுத்த இயக்குநர்! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர்












Click it and Unblock the Notifications