டிரெண்ட் மாறுகிறதே.. குஜராத்தில் தனிப்பெரும்பான்மை பெறுமா பாஜக?
Recommended Video
டெல்லி: குஜராத் சட்டசபை தேர்தல் டிரெண்டிங் மாறத்தொடங்கியுள்ளது. இதனால் பாஜக அறுதி பெரும்பான்மையோடு ஆட்சியை பிடிக்குமா அல்லது இழுபறியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
குஜராத்தில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் பாஜக முன்னிலை பெற்றது. ஆனால் 8.45 மணிக்கு பிறகு நிலைமை மாறியது. காங்கிரஸ் மெல்ல, மெல்ல முன்னேறத் தொடங்கியது.
காலை 8.55 மணி நிலவரப்படி, காங்கிரஸ் 53 தொகுதிகளிலும், பாஜக 65 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. இது பெரிய வித்தியாசம் இல்லை. எப்போது வேண்டுமானாலும் டிரெண்ட் மாற வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், பாஜக அறுதி பெரும்பான்மையோடு ஆட்சியமைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தனிப்பெரும் கட்சியாக வந்தால் கூட்டணி களேபரங்கள் ஏற்படும். அல்லது, காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வந்தால் அக்கட்சி கூட்டணியை நாட வேண்டி வரும். இதேபோல கோவாவில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வந்தபோதிலும், கூட்டணி அமைப்பதில் கோட்டை விட்டதால், ஆளுநர் ஆசியுடன், பாஜக ஆட்சியமைத்தது.
இப்போது குஜராத்திலும் கடும் போட்டி கொடுத்து வருகிறது காங்கிரஸ். எனவே வாக்கு எண்ணிக்கை சுவாரசியமாக மாறியுள்ளது.