மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படுமா? மத்திய ரயில்வே அமைச்சர் பதில்
அஹமதாபாத்: ரயில் கட்டண சலுகை மூத்த குடிமக்களுக்கு மீண்டும் வழங்கப்படுமா என்பது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார். அவர் என்ன சொன்னார் என்பதை இப்போது பார்ப்போம்.
இந்தியாவின் மிகப்பெரிய அரசு நிறுவனமான ரயில்வே ஒரு நாளைக்கு ஏராளமான ரயில்களை பல்வேறு பகுதிகளுக்கு இயக்கி வருகிறது. இந்திய மக்களின் முக்கியமான போக்குவரத்தாக ரயில்கள் உள்ளது. சாமானிய மக்கள் அதிகம் பயணிப்பது ரயில்களில் தான். தொலைதூர பயணம் மேற்கொள்ளும் ஏழை எளிய மக்களுக்கும், பிழைப்பு தேடி வெளியூர் அல்லது வெளிமாநிலம் வரும் மக்களுக்கும் வரப்பிரசாதமாக ரயில்கள் உள்ளன.'

இந்த ரயில்களில் பல ஆண்டுகளாக மூத்த குடிமக்களுக்கு பயண கட்டணத்தில் 50 சதவீதம் வரை சலுகை அளிக்கப்பட்டு வந்தது. பெண்கள் மூத்த குடிமக்கள் பயணிகளுக்கு 50 சதவீத சலுகையும், வயதான ஆண் மற்றும் திருநங்கைகளுக்கு அனைத்து வகுப்புகளிலும் 40 சதவிகிதமும் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டது. சலுகையைப் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு ஒரு பெண்ணுக்கு 58 வயதாகவும், ஆணுக்கு 60 வயதாகவும் இருந்து வந்தது.
இந்த சூழலில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ரயில் சேவைகள் நாடு முழுவதும் 3 மாதங்கள் முற்றிலும் முடங்கியது. இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை சமாளிக்க மூத்த குடிமக்களுக்கான சலுகையை இந்திய ரயில்வே அப்போது ரத்து செய்தது.
ஆனால் 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் ரயில் சேவை முழுவதுமாக பழையபடி தொடங்கப்பட்ட நிலையில் இப்போது வரை மூத்த குடிமக்களுக்கு பயண கட்டணத்தில் சலுகை வழங்கப்படவில்லை. அதேநேரம் 2022-23 ஆம் ஆண்டில் மூத்த குடிமக்கள் பயணிகளுக்கு வழங்கப்பட்ட சலுகையை ரத்து செய்ததன் மூலம் சுமார் 2,242 கோடி ரூபாய் கூடுதல் வருவாயை ரயில்வே ஈட்டியுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஒரு கேள்விக்கு பதில் அளித்த ரயில்வே, 2022ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் 2023ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரையான காலகட்டத்தில், கிட்டத்தட்ட எட்டு கோடி மூத்த குடிமக்களுக்கு சலுகைகளை வழங்கவில்லை. சுமார் 4.6 கோடி ஆண்கள், 3.3 கோடி பெண்கள் மற்றும் 18,000 திருநங்கைகள் ஆகியோர் பயணம் செய்தனர். இந்த காலகட்டத்தில் மூத்த குடிமக்கள் பயணிகளின் மொத்த வருவாய் ரூ. 5,062 கோடியாகும். இதில் சலுகை நிறுத்தப்பட்டதன் மூலமாக ரயில்வே துறை ரூ.2,242 கோடி ஈட்டப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரயில்வே வெளியிட்ட தகவலின் படி, 2020ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி முதல் 2022ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரையான காலக்கட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட 4.46 கோடி ஆண் பயணிகளும், 58 வயதுக்கு மேற்பட்ட 2.84 கோடி பெண் பயணிகளும், 8,310 திருநங்கைகள் என மொத்தம் 7.31 கோடி மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் வழங்கவில்லை.
இந்த நிலையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், குஜராத்தின் ஆமதாபாத் நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் புல்லட் ரெயில் திட்டப்பணிகளை நேற்று நேரில் ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, "மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படுமா?" என செய்திகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை. அதேநேரம் வேறு கருத்தை அவர் கூறினார். அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், இந்திய ரயில்வே ஏற்கனவே ஒவ்வொரு ரயில் பயணிக்கும் ரயில் கட்டணத்தில் 55 சதவீத சலுகையை வழங்கி வருகிறது. சேரும் இடத்துக்கான ரயில் டிக்கெட் ரூ.100 என்றால், ரயில்வே கட்டணம் ரூ.45 மட்டுமே. இதன் மூலம் ரூ.55 சலுகையாக அளிக்கப்படுகிறது என்றார்.
-
சென்னை டூ சேலம் அதிவிரைவு சாலை.. திருவண்ணாமலை வரை அமைவது ஏன்.. அரசின் பிளான் என்ன? -
கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி.. அள்ளி வீசும் எடப்பாடி! அதிமுக 3ம் கட்ட தேர்தல் வாக்குறுதி -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணியால் வீட்டை விட்டு போகும் மீனா.. முத்து பிடித்த பாயிண்ட்! அண்ணாமலை கொடுத்த அதிர்ச்சி -
Guru Peyarchi: 2026 இல் குருப்பெயர்ச்சி எப்போது?.. பொதுப் பலன்கள் முழு விவரம் இதோ -
கன்னியாகுமரியின் அடையாளம் மாறுகிறது! திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா வளைவை திறந்து வைக்கிறார் முதல்வர் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: கல்யாணத்தை நிறுத்திய பாட்டி.. மீனா கொடுத்த ஐடியா, மயிலுக்கு இரட்டை சந்தோசம்! -
மெரினாவை மறந்த ஓபிஎஸ்.. சத்தமில்லாமல் அறிவாலயத்திற்கு அடிபோடும் ரகசியம்.. இதுதான் மாஸ்டர் பிளானா -
மின்சார வாரியம் குட் நியூஸ்! காலி இடத்தை வாடகைக்கு விட்டு லட்சங்களில் சம்பாதிக்கலாம்! மெகா கொள்முதல் -
கூட்டுறவு வங்கிகளில் கடன் தள்ளுபடி முதல் கருணைத் தொகை வரை! அதிமுக கொடுத்த 17 வாக்குறுதிகள் யாவை? -
தங்கம்.. தங்கம்.. தேடி வரும் பல லட்சம் லாபம்.. ரிசர்வ் வங்கி மிக முக்கிய அறிவிப்பு.. தரமான முடிவு -
கண்கள் சிவந்த டிரம்ப்.. இந்தியா உட்பட உலக நாடுகளுக்கு புதிய எச்சரிக்கை! வரியை தாண்டி ஆக்ஷன் பாயுமாம் -
Election Exclusive: நேத்து வந்த தேமுதிகவுக்கே.. அறிவாலயத்தில் வார்த்தை விட்ட மதிமுக! கட் அண்ட் ரைட்டாக பேசிய திமுக! பரபர












Click it and Unblock the Notifications