”நாட்டுக்காக உயிர் கொடுத்தவருக்கு மரபுகள் தேவையில்லை”- தந்தையின் சவப்பெட்டியை சுமந்து சென்ற மகள்!
பதன்கோட்: பஞ்சாப் மாநிலம் பதன்கோட் தாக்குதலில் மரணமடைந்த வீரர் ஒருவரின் மகள் அவரது சவப்பெட்டியை சடங்கு, சம்பிரதாயங்களைத் தாண்டி சுமந்து சென்ற சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
பஞ்சாப் மாநிலம், பதன்கோட் விமானப்படை தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்; அவர்களுக்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர்.
பதன்கோட் விமானப்படை தள தாக்குதலில் பலியான பாதுகாப்பு படையினரில் மேஜர் பதே சிங் என்ற ராணுவ அதிகாரியும் அடங்குவார்.

சொந்த ஊரில் உடல் தகனம்:
அவரது உடல் தகனம், குர்தாஸ்பூரில் நடைபெற்றது. அப்போது, ஆசிரியையான பதே சிங்கின் மகள் மது, அவரது உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியை தகன மேடைவரை தோளில் சுமந்து சென்றார்.

ஆண்களுக்கு மட்டுமே உரிமை:
பொதுவாக இந்து மதத்தில் ஆண்கள் மட்டுமே இறந்தவர்களின் உடலை சுமக்க தோள் கொடுப்பது வழக்கம். அந்த சம்பிரதாயத்தை உடைத்து மது தன் தந்தையின் உடலை சுமந்து சென்றார்.

சண்டைக்கு புறப்பட்ட தந்தை:
பின்னர் அவர் நிருபர்களிடம் சம்பவத்தன்று தாங்கள் உயிர் தப்பியது பற்றி விவரித்தார். குண்டு வெடிப்பு சத்தம் கேட்டவுடன் தன் தந்தை சீருடை அணிந்து கொண்டு சண்டைக்கு புறப்பட்டதாக அவர் கூறினார்.

கட்டிலுக்கு அடியில் பதுங்கல்:
தன் குடும்பத்தினர் இரண்டு மணி நேரம் படுக்கைக்கு அடியிலேயே பதுங்கி இருந்ததாகவும், தீவிரவாதிகளின் கண்ணில் படுவதை தவிர்க்க இருட்டியவுடன் விளக்குகளை அணைத்து விட்டதாகவும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications