Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

”நாட்டுக்காக உயிர் கொடுத்தவருக்கு மரபுகள் தேவையில்லை”- தந்தையின் சவப்பெட்டியை சுமந்து சென்ற மகள்!

Subscribe to Oneindia Tamil

பதன்கோட்: பஞ்சாப் மாநிலம் பதன்கோட் தாக்குதலில் மரணமடைந்த வீரர் ஒருவரின் மகள் அவரது சவப்பெட்டியை சடங்கு, சம்பிரதாயங்களைத் தாண்டி சுமந்து சென்ற சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

பஞ்சாப் மாநிலம், பதன்கோட் விமானப்படை தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்; அவர்களுக்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர்.

பதன்கோட் விமானப்படை தள தாக்குதலில் பலியான பாதுகாப்பு படையினரில் மேஜர் பதே சிங் என்ற ராணுவ அதிகாரியும் அடங்குவார்.

சொந்த ஊரில் உடல் தகனம்:

சொந்த ஊரில் உடல் தகனம்:

அவரது உடல் தகனம், குர்தாஸ்பூரில் நடைபெற்றது. அப்போது, ஆசிரியையான பதே சிங்கின் மகள் மது, அவரது உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியை தகன மேடைவரை தோளில் சுமந்து சென்றார்.

ஆண்களுக்கு மட்டுமே உரிமை:

ஆண்களுக்கு மட்டுமே உரிமை:

பொதுவாக இந்து மதத்தில் ஆண்கள் மட்டுமே இறந்தவர்களின் உடலை சுமக்க தோள் கொடுப்பது வழக்கம். அந்த சம்பிரதாயத்தை உடைத்து மது தன் தந்தையின் உடலை சுமந்து சென்றார்.

சண்டைக்கு புறப்பட்ட தந்தை:

சண்டைக்கு புறப்பட்ட தந்தை:

பின்னர் அவர் நிருபர்களிடம் சம்பவத்தன்று தாங்கள் உயிர் தப்பியது பற்றி விவரித்தார். குண்டு வெடிப்பு சத்தம் கேட்டவுடன் தன் தந்தை சீருடை அணிந்து கொண்டு சண்டைக்கு புறப்பட்டதாக அவர் கூறினார்.

கட்டிலுக்கு அடியில் பதுங்கல்:

கட்டிலுக்கு அடியில் பதுங்கல்:

தன் குடும்பத்தினர் இரண்டு மணி நேரம் படுக்கைக்கு அடியிலேயே பதுங்கி இருந்ததாகவும், தீவிரவாதிகளின் கண்ணில் படுவதை தவிர்க்க இருட்டியவுடன் விளக்குகளை அணைத்து விட்டதாகவும் அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+