மீண்டு(ம்) வந்தார் அபிநந்தன்.. சக விமான படை வீரர்களுடன் செல்பி எடுத்து உற்சாகம்.. வைரல் வீடியோ
ஜம்மு: பாகிஸ்தான் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட விங் கமாண்டர் அபிநந்தன் சனிக்கிழமை பணியில் சேர்ந்தார். அப்போது அவருடன் ஏராளமான வீரர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.
காஷ்மீரில் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் படையினர் வீரமரணமடைந்தனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் முகாமை இந்தியா வான் வழித் தாக்குதல் நடத்தி அழித்தது.
இதனால் கடும் கோபத்தில் இருந்த பாகிஸ்தான், இந்தியாவுடன் வான் வழித் தாக்குதல் நடத்த புறப்பட்டது. அந்த விமானங்களை இந்திய விமான படையினர் புறமுதுகிட்டு ஓடச் செய்தார்.

பிணை
அப்போது மிக் ரக விமானம் ஒன்றை விங் கமாண்டராக உள்ள அபிநந்தன் இயக்கினார். இதில் பாகிஸ்தான் வீசிய குண்டுவீச்சில் இருந்து தப்ப பாராசூட் மூலம் கீழே குதித்தார். அப்போது பாகிஸ்தான் எல்லையில் அவர் விழுந்ததை அடுத்து அவரை அந்நாட்டினர் கடந்த பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி பிடித்து வைத்துக் கொண்டனர்.

4 வாரங்கள்
இவரை பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய விதத்தை அந்நாட்டினரே எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இந்திய அரசு முயற்சியின் பேரில் அவர் மார்ச் 1-ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். பாராசூட் மூலம் கீழே குதித்ததால் காயமடைந்த அபிநந்தனுக்கு மருத்துவ சோதனை நடத்தி முடிக்கப்பட்டு 4 வாரங்கள் விடுப்பு அளிக்கப்பட்டது.
|
மீண்டும் பணி
இதையடுத்து அபிநந்தன் மீது மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடத்தலாம் என்பதால் ஸ்ரீநகரில் அவருக்கு அமைதியான ஒரு இடத்தில் பணிமாறுதல் வழங்கப்பட்டது. விடுப்பு முடிந்து ஜம்மு- காஷ்மீரில் அபிநந்தன் மீண்டும் பணியில் சேர்ந்தார்.

வேண்டுதல்
இந்த நிலையில் அவர் வீரர்களுடன் எடுத்துக் கொண்ட செல்பி, வீடியோக்கள் நேற்றைய தினம் வைரலாகி உள்ளன. இதுகுறித்து அபிநந்தன் கூறுகையில் இந்த போட்டோக்கள் எல்லாம் உங்களுக்காக எடுக்கப்படுவது அல்ல. நான் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என உங்கள் குடும்பத்தினரின் வேண்டுதலுக்காக. அவர்கள் அனைவரையும் என்னால் சந்திக்க இயலாது என்பதால்தான் என அபிநந்தன் கூறியுள்ளார். இந்த வீடியோ ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்டது போல் தெரிகிறது. அந்த வீடியோவில் அவர் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என தெரிகிறது.
-
மொத்த இந்தியாவும் முடங்கப்போகுது.. தீவிரமாகும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. மோடியை சந்தித்த பூரி - ஜெய்சங்கர் -
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. நாடாளுமன்றத்தில் கொந்தளித்த எதிர்க்கட்சி எம்பிக்கள்! -
பெங்களூரில் ஒரு ரகசிய உலகம்.. இருட்டில் மின்னிய தகாத உறவுகள்! 40 லட்சம் பேராயும் போட்டுடைத்த க்ளீடன் -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
படிச்சு படிச்சு சொன்னோமே சண்டை வேணாம்னு! இப்போ பொணத்தைக் கூட எரிக்க முடியல! இப்படி ஒரு சிக்கலா? -
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
ஐடி வேலை போனால் என்ன.. அமெரிக்காவிலேயே டீக்கடையை போட்ட இந்திய ஐஐடி பட்டதாரி! -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
வளைகுடா போர்.. விளக்கமளித்த ஜெய்சங்கர்! விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான்












Click it and Unblock the Notifications