பெங்களூர் கப்பன் பார்க் டென்னிஸ் கிளப் பாதுகாவலர்களால் 30 வயது பெண் பலாத்காரம்
பெங்களூர்: பெங்களூரில் 30 வயது பெண்மணி தனியார் பாதுகாவலர்கள் இருவரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூர் அடுத்த தும்கூர் நகரை சேர்ந்தவர் 30 வயது பெண்மணி. இவர், பெங்களூர் கப்பன் பார்க் பகுதியிலுள்ள டென்னிஸ் கிளப்பில் இணைவதற்காக கடந்த 11ம் தேதி, அங்கு வந்துள்ளார்.
டென்னிஸ் கிளப்பில் இணைவதற்கான ஆவணங்களை நிரப்பி கொடுத்துள்ளார். ஆனால், இன்னும் சில ஆவணங்கள் தேவைப்படுவதாக கிளப் நிர்வாகம் கேட்டுள்ளது. இதையடுத்து, பெங்களூரிலேயே அன்று தங்கிவிடுவது என அப்பெண் முடிவு செய்துள்ளார்.

கிளப்பில் இருந்து இரவு 9 மணிக்கு, தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அப்பெண் நடந்து சென்றுள்ளார். அப்போது கிளப்பில் இருந்த இரு பாதுகாவலர்கள் அவருடன் துணைக்கு வருவதாக கூறியுள்ளனர். இதை நம்பிய அப்பெண் இருவரையும் உடன் அழைத்து சென்றுள்ளார்.
சித்தகங்கா சர்க்கிள், பகுதிக்கு சென்றபோது, இரு பாதுகாவலர்களும், திடீரென அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து அப்பெண், இன்று, கப்பன்பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
வழக்கை பதிவு செய்த போலீசார், அந்த இரு காவலர்களையும் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications