இங்க இருந்த டாய்லெட்டை காணோம்.. வடிவேல் பாணியில் போலீசிடம் புகார் கொடுத்த சத்தீஸ்கர் பெண்
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன் வீட்டு கழிப்பறையை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளார்.
ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன் வீட்டு கழிப்பறையை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளார்.
அமர்பூர் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. பேலா பாய் பட்டேல், சந்தா என்ற இரண்டு பெண்கள் போலீசில் இந்த புகாரை கொடுத்து இருக்கிறார்கள்.
இந்த புகாரை கொடுக்க சுரேந்திர பட்டேல் என்ற சமூக சேவகர் அந்த பெண்களுக்கு உதவி இருக்கிறார். வடிவேல் கிணற்றை காணும் என்று புகார் கொடுத்தது போலவே இந்த சம்பவம் நடந்து இருக்கிறது.

கழிப்பறை பணம்
பேலா பாய் பட்டேல், சந்தா குடும்பத்திற்கு 2016ல் கழிப்பறை கட்டித்தருவதாக அரசு அறிவித்து இருக்கிறது. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் அவர்கள் குடும்பம் இலவச கழிப்பறைக்கு தேர்வாகி இருக்கிறது. இதற்கான பணம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பணம் சுருட்டப்பட்டது
ஆனால் இதற்காக வழங்கப்பட்ட பணத்தை பஞ்சாயத்து நிர்வாகிகள் சுருட்டி இருக்கிறார்கள். அந்த பெண்ணின் குடும்பத்திடம் கழிப்பறை கட்ட பணம் கொடுக்கவில்லை என்று பொய் சொல்லி இருக்கிறார்கள். அந்த கிராமத்தில் பல குடும்பங்கள் இப்படி ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள்.

சமூக சேவகர்
சுரேந்திர பட்டேல் என்ற சமூக சேவகர் இந்த மோசடியை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கண்டுபிடித்து இருக்கிறார். ஏற்கனவே கழிப்பறை கட்டப்பட்டுவிட்டதாக கோப்புகள் தயார் செய்யப்பட்டு இருக்கிறது. கழிப்பறை கட்டாமல் கட்டிவிட்டதாக பஞ்சாயத்து அதிகாரிகள் எழுதி கொடுத்துள்ளார்கள்.

பெண் புகார்
தற்போது இந்த தகவல் அறியும் உரிமை சட்ட விவரத்தை வைத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. அரசு கட்டிக் கொடுத்த கழிப்பறையை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்து இருக்கிறார்கள். போலீசில் இதில் என்ன நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டு இருக்கிறது.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications