பெண் கான்ஸ்டபிளின் பயங்கர புகார்.. கமாண்டோக்கள், ஏட்டு, டிரைவர் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு
Subscribe to Oneindia Tamil
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண் காவலர், பரபரப்புப் புகாரைக் கூறியுள்ளார்.
போலீஸார் சிலர் சேர்ந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோவில் எடுத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தப் பெண் காவலர், ராஜஸ்தான் ஆயுதப் படை பிரிவில் கான்ஸ்டபிளாக உள்ளார். இவர் கூறியுள்ள புகாரில், 3 கமாண்டோக்கள், 2 காவலர்கள், ஒரு டிரைவர் ஆகியோர் சேர்ந்து தன்னை சரமாரியாக பலாத்காரம் செய்ததாகவும், அதை வீடியோவில் எடுத்து வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த ஆபாச வீடியோவை காட்டி தன்னை மிரட்டி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த புகார் ராஜஸ்தானில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications