உ.பி.யில் மீண்டும் அட்டகாசம்: அமேதியில் 25 வயது பெண் பாலியல் பலாத்காரம்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் 25 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்காராம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் பதாவ்ன் மாவட்டத்தில் சகோதரிகள் இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு மரத்தில் பிணமாக தொங்கவிடப்பட்டனர். இதையடுத்து 22 வயது பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு ஆசிடை வலுக்கட்டாயமாக குடிக்க வைக்கப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார்.
மேலும் அலிகரில் பெண் நீதிபதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்நிலையில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியின் தொகுதியான அமேதியில் 25 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அவர் போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் 4 பேரை கைது செய்தனர்.
உத்தர பிரதேசத்தில் அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் நடந்து வரும் நிலையில் அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவும், அவரது தந்தையும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவும் சற்றும் பொறுப்பில்லாமல் பேசி வருவது பலரையும் எரிச்சல் அடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications