Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ம.பியில் பெண் பாலியல் பலாத்காரம்: சிறுநீரை குடிக்க வைத்து கொடுமை செய்த கணவன்- 10 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்தியப் பிரதேசத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் உள்பட 10 பேரால் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தை உலுக்கியுள்ள இந்தச் சம்பவம் குறித்து அம்மாநில போலீஸார் வெளியிட்ட தகவல்கள்:

'பிப்லாட் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பிலாய் கேதா என்ற இடத்தில் கடந்த 10ம் தேதியன்று பாழங்குடியினப் பெண்ணை கணவரே தனது உறவினர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளார்.

வன்கொடுமைக்குப் பின்னர் மகனின் கண் முன்னால் நிர்வாணக் கோலத்தில் வலம்வரச் செய்யப்பட்ட அந்தப் பெண், பலவந்தமாக சிறுநீர் அருந்த கட்டாயப்பட்டுத்தப்பட்டுள்ளார்.

அக்கம் பக்கத்தவர்கள், உறவினர்களின் துணையுடன் கந்த்வேடா மாவட்ட மருத்துவமனையில் அந்தப் பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து ஜூன் 13-ல் தனக்கு நடந்த கொடுமைகளை முறைப்படி போலீஸில் புகார் அளித்தார்.

நிர்வாண கோலத்தில்

தனது கணவர் உள்பட 10 பேரால் தாம் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், தன் இளம் வயது மகனின் முன்னிலையில் நிர்வாண கோலத்தில் உலவவிடப்பட்டதாகவும் தனது புகாரில் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். அத்துடன், தாகத்துக்குத் தண்ணீர் கேட்ட தன்னிடம், சிறுநீர் அருந்தக் கட்டாயப்படுத்தியதாகவும் அவர் தனது புகாரில் விவரித்துள்ளார்.

கணவர் கைது

அந்தப் புகாரின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், அவரது உறவினர்கள் உள்பட 10 பேரை சனிக்கிழமை போலீஸ் கைது செய்தது.

வன்கொடுமை வழக்குப் பதிவு

கூட்டுப் பாலியல் பலாத்காரம், வன்கொடுமைக்கு ஆளாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 10 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது' என்று மத்திய பிரதேச போலீஸார் தெரிவித்தனர்.

முன்விரோதம்

இதனிடையே, நிலத் தகராறு காரணமாகவே, முன் விரோதம் காரணமாக, தனது மனைவியும், அவரது உறவினர்களும் பொய் வழக்கு போட்டுள்ளதாக, அந்தப் பெண்ணின் கணவர் கூறியிருக்கிறது.

மருத்துவபரிசோதனை

தற்போது, மருத்துவப் பரிசோதனைக்கும், சிகிச்சைக்காகவும் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

உத்தரப் பிரதேச நிகழ்வு, பொள்ளாச்சி பயங்கரத்தைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்தில் இத்தகைய சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+